வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில நேரங்களில் இந்த நோய்க் காரணிகள் தப்பி விடுகின்றன..? இதற்கு விடையை அறிந்து கொண்டால்தான் இம்யூனோதெரபி சிகிச்சையைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கேள்விக்குப் பல பதில்கள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, புற்றுநோய் எவ்வாறு பல நேரங்களில் தந்திர வேலைகள் செய்து நமது நோயெதிர்ப்பு சக்தியின் பார்வையிலிருந்து தப்பித்துக்கொள்கிறது என்பதில் உள்ளது.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment