Home » மது விலக்கு மாநாடும் அவல நகைச்சுவை அரசியலும்
நம் குரல்

மது விலக்கு மாநாடும் அவல நகைச்சுவை அரசியலும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. இதனை, ‘தமிழ்நாட்டு அரசு கலந்துகொள்ளவில்லை, அரசை வழி நடத்தும் கட்சிதான் கலந்துகொள்கிறது’ என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசும் அதனை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸும் என்று சொன்னால் வித்தியாசத்தை உணர்வது எளிது. ஆனால் தமிழ்நாட்டு அரசும் அதனை வழி நடத்தும் திமுகவும் என்றால் பாமர மக்கள் சிறிது குழம்பிவிடுவார்கள். எப்படி ஆனாலும் மது விலக்கில் திமுகவுக்கு உள்ள அக்கறை மகிழ்ச்சி தருகிறது.

ஆனால், உண்மை நிலவரம் என்ன; முழு மது விலக்குக்கான சாத்தியப்பாடுகள் எவை என்பது பற்றி இம்மாநாட்டை நடத்துவோருக்கும் தெரியும், மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ளவிருப்பவர்களுக்கும் தெரியும். அவர்களைவிடக் கூடுதலாக மக்களுக்கும் தெரியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்