தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இருபத்தைந்தாயிரம் பேருக்கு மேல் எச்.ஐ.வி கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுப் பரவலுக்கு டாட்டூ போடுவதும், போதை ஊசி பழக்கமும் கூட காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
எச்.ஐ.வி வைரஸ், மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கவல்லது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். அது, பல நோய்கள் ஏற்படுவதற்கும், தீவிரமடைவதற்கும் காரணமாகிவிடும். இந்தத் தொற்றை உண்டாக்கும் காரணிகளில் அதிகம் விவாதிக்கப்படாதவை டாட்டூ எனப்படும் பச்சை குத்துவதும், போதை ஊசி பயன்பாடும்தான்.
அண்மையில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதை மருந்து பயன்பாடு அதிகமாகி வருவதாக, போதைத் தடுப்பு ஆணையம், தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்து தெரியப்படுத்தியுள்ளது.
Add Comment