Home » Archives for அ. பாண்டியராஜன்

Author - அ. பாண்டியராஜன்

Avatar photo

இந்தியா

இந்தியாவில் ஸ்டார்லிங்க்: யாருக்கு லாபம்?

டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட...

Read More
இந்தியா

முதல்ல இருந்து எண்ணுங்க!

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கருத்துகள் இந்தியாவை வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பொதுவெளியில் மிகப்பெரிய விவாதங்கள் நடப்பதற்கான காரணமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென இந்திய...

Read More
சட்டம்

காலம் தாழ்த்தப்பட்ட நீதி

டெல்லி சரஸ்வதி விஹாரில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகிய இருவரும் 1984ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை...

Read More
சட்டம்

சட்டம் மீறினால் கட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பல சட்ட முன்வரைவுகளை முன்மொழிய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது வெளிநாட்டவர்கள் இந்தியாவில் குடியேறுவது தொடர்பானது. இந்த புதிய சட்டத்தின் மூலமாகக் குடியேற்றம் தொடர்பான விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்திருக்கிறது மத்திய...

Read More
இந்தியா

நேற்றுவரை டெல்லி; இனி இந்திரப்ரஸ்தம்

கால் நூற்றாண்டுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்றிருக்கிறது. இனி இரட்டை இஞ்ஜின் ஆட்சி மூலமாக டெல்லி சொர்க்கபுரியாகும் என அந்தக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் நம்பத்...

Read More
இந்தியா

குஜராத் புல்டோசர்

ஒரு மாநிலத்தில் தொடர்ந்து ஏழுமுறை தேர்தலில் வென்று ஆட்சியில் இருப்பது சாதாரண விஷயமல்ல. பாரதிய ஜனதா கட்சி அதனைச் செய்து காட்டியிருக்கும் இடம் குஜராத். குஜராத் மாடல் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு வளர்ச்சி எனப் பெயரிட்டுச் சீவி சிங்காரித்து அழகாக்கித் தேர்தலின்போது மக்களுக்காகக் காட்சிக்கு வைத்தது...

Read More
ஆன்மிகம்

யார் இந்த அகோரிகள்?

ஜனவரி மாதத்தின் குளிர்ந்த நள்ளிரவு. நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் மக்கள். அந்த இரவு சாதாரணமானதல்ல என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்திருந்தனர். உடலை உறைய வைக்கும் பனி ஒரு பொருட்டல்ல. இன்னும் சில நிமிடங்களில் சாஹி ஸ்நானம் என்றழைக்கப்படும் புனித நீராடலைத் துறவிகள் நடத்தி...

Read More
திருவிழா

பலூன் இருக்கு, பாத்ரூம் இல்லை!

சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் கோவளத்தை அடுத்த திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடந்தன. பல நாடுகளிலுமிருந்து வந்திருந்த கலைஞர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர். பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜப்பான், பிரேசில், பெல்ஜியம் ஆகிய இருபது...

Read More
இந்தியா

திரும்ப வராது, ஆனா வரும்!

2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள் மனங்களில் பிரிவினைவாத விதைகளை விதைத்தது, தீவிரவாதச் செயல்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இதைச் சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு...

Read More
ஆண்டறிக்கை

இடைவேளைக்குப் பிறகு: அ. பாண்டியராஜன்

ஒவ்வோராண்டும் நாம் என்ன செய்தோம் என நினைத்துப் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. என்றாலும் மெட்ராஸ் பேப்பரில் எழுதத் தொடங்கியபிறகு அதனை ஆவணப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டை திரும்பிப் பார்ப்பது மட்டுமல்ல அடுத்த ஆண்டை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் உடன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!