44 மூடுபனி டிசம்பர் மாத இரவு 12 மணிக்குக் கரையில் நின்றபடி, ‘நீருக்கு மேலே பஞ்சுப்பொதிபோல மேகம் அசையாமல் நின்றுகொண்டிருக்க, ஏரி உயிருள்ள ஓவியம்போல இருக்கிறது’ என்று அவன் சொன்னான். சிரித்தபடி, ‘அது மேகமில்லே மிஸ்ட்’ என்றார் பிரம்மராஜன். நானே இந்த நேரத்துல இப்பதான் லேக்கை...
Author - விமலாதித்த மாமல்லன்
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு...
42 உட்காருதல் காலையில் வந்து இறங்கி, அறைக்குப்போய் ஜோல்னா பையை வைக்கும்போதே, உள்ளே இருந்த காவியைப் பார்த்துவிட்டு, பல் விளக்கிக்கொண்டிருந்த பாலாஜி கேட்டான்: என்ன சார் மலைக்குப் போறீங்களா. பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வைத்தான். திங்கக்கெழமை வரச்சொன்னா இப்ப வந்திருக்கீங்க, என்று ஏறெடுத்துப்...
41. பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின் வாயிற்காலில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு உறைத்தது. கரும்பலகைக்கு முன்னால் இருந்த மேடைமேல் போடப்பட்டிருந்த மேஜை மீது கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொஞ்சம்...
40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம் என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான். வளர்ந்து ஆளான பிறகும்கூட இது...
39 ஒரு நிமிஷம் மெட்ராஸில் இருந்த அந்த சில நாட்களில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து டிரைவ் இன் வந்து காலையில் பொங்கல் வடை தின்றதிலிருந்து அந்த நிமிஷம் வரை என்ன நடந்ததென்று எஸ்விஆர் வீட்டு மொட்டை மாடியில், அவருடன் உலாத்தியபடி ஆதியோடந்தமாய் சுவாரசியமாய் சொல்லிக்கொண்டிருந்தான். அவருக்கும் அது...
38 காவியும் பாவியும் காலையில் சென்ட்ரலில் வந்து இறங்கியவனுக்கு, நம் இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பறப்பதுபோல குஷியாக இருந்தது. இருள் பிரியப்போவதற்கான அறிகுறிகள், இடப்பக்கம் கூடவே வந்துகொண்டிருந்த வானத்தில் லேசாகத் தெரிய ஆரம்பித்திருந்தன. வானம் எப்படிக் கூட வரும். வருவதைப்போல இருப்பது தோற்ற...
37 எழுத்தும் வாழ்வும் மறுநாள் மாலை ஆபீஸ் விட்டதும் அறைக்கு வராமல், வீட்டில் தங்கவைத்து, அறையும் பார்த்துக்கொடுத்த ஜீவாவைப் பார்க்க மரியாதை நிமித்தம் அவர் வீட்டிற்குப் போனான். வாசலிலேயே பெரியவர் அமர்ந்திருந்தார். பார்த்ததும் வழக்கம்போல நட்போடு சிரித்தார். ஆனால், முதல்முறை பார்த்தபோது இருந்ததுபோல...
36 அறைவாசிகள் காலைல எட்டறைக்குக் கெளம்பிடுவோம். சாயங்காலம் ஆறரைக்கு வந்துருவோம் என்று சொல்லி, வளையத்திலிருந்து கழற்றி ஒரு சாவியைக் கொடுத்தான், மணி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட உயரமான பையன். இவன்தான், இருக்கட்டும் சாவிக்கு என்ன இப்ப என்று மறுநாள் சாயங்காலமாகப் பெட்டியுடன் வந்தான். அவர்கள்...
35 இடம் ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார். அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து...