பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் பெரும்பான்மை இனத்தின் அதிபரோ, பிரதமரோ அவ்வினத்தவரால் கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடப்படும் போது, சிறுபான்மையினரால் புறக்கணிக்கப்படுவது என்பது அத்தேசம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்களில் ஒன்று. இலங்கையைச் சிங்கப்பூர் ஆக்கப் போவதாய்ச் சொல்லாத அரசியல்வாதிகள் எவருமில்லை...
Tag - கோட்டாபய ராஜபக்சே
கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா, புலிகளிடமிருந்து பெயர்த்து எடுக்கப்படாமல் இருந்தால் மகிந்த ராஜபக்சேவுக்கு கிழக்கு மாகாண வெற்றி என்றைக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இப்பிரித்தாளும் சூதைச் செய்தவர் 2002 – 2004ம் ஆண்டுகளில் பிரதமராய் இருந்த ரணில். ஆனால் முழுப் பலனும் மகிந்தவிற்கே கிடைத்தது...
தேர்தல் திணைக்களம் ஜனாதிபதி ரணிலுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. ஆம். இது இலங்கைக்குத் தேர்தல் ஆண்டு.அரசியல் சாசனப்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கும், அக்டோபர் 17ம் தேதிக்குமிடையில் நடத்தியே ஆகவேண்டும். இலங்கைக்கு என்று ஒரு...
முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து...
1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை...
முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காகவே 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகைத் தினத்தில் கிறிஸ்தவத் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து இருநூற்று எழுபது அப்பாவி உயிர்களைப் பலியெடுத்த படுமிலேச்சத்தனமான குண்டு வெடிப்புக்கள்...
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு...