91. அவமதிப்புகளை மறந்துவிடுங்கள் நவம்பர் 4 அன்று, சாரதாபஹன் மேத்தா என்பவர் சத்தியாக்கிரக ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாட்களுக்குப்பிறகு (நவம்பர் 6) இந்துலால் கன்ஹையாலால் யாக்னிக் என்பவரும் அங்கு வந்து தங்கினார். இவர்கள் இருவரும் குஜராத்தின் கல்வி முன்னேற்றத்துக்குப் பெரிய அளவில்...
Tag - என். சொக்கன்
90. ஒரே ஆசிரியர் செப்டம்பர் 20 அன்று காந்தி அகமதாபாதிலிருந்து மும்பைக்கு வந்தார். அவருடைய வருகையின் நோக்கம், சாந்திநிகேதனத்திலிருந்து வந்திருந்த C. F. ஆன்ட்ரூஸ், W. W. பியர்சன் என்ற இரு நண்பர்களைச் சந்தித்துத் தன்னுடைய ஆசிரமத்துக்கு அழைத்துவருவதுதான். அதே நாளில் அவர்கள் மூவரும் மும்பையில் ஒரு...
89. காந்தியின் மகள் கொள்கை உறுதியில் காந்தி எப்படிப்பட்டவர் என்பதைத் தூதாபாயை ஆசிரமத்தில் சேர்த்துக்கொண்ட நிகழ்வு உலகுக்குக் காண்பித்தது. அத்துடன், எப்பேர்ப்பட்ட உறுதியான எதிர்ப்பையும் பொறுமையாலும் அன்பாலும் மாற்றிவிடலாம் என்பதற்கான வலுவான எடுத்துக்காட்டாகவும் அது அமைந்தது. ‘இந்த...
88. ஞாலத்தின் மாணப் பெரிது சத்தியாக்கிரக ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிந்ததும், அதுவரை காந்திக்கு நன்கொடை வழங்கிக்கொண்டிருந்த அகமதாபாத் பெரிய மனிதர்கள் அனைவரும் மொத்தமாகக் கையைத் தூக்கிவிட்டார்கள், ‘இனிமேல் நாங்கள் உங்களுக்கு உதவுவதற்கில்லை...
87. மனமாற்றம் செப்டம்பர் 26 அன்று, தூதாபாயும் அவருடைய மனைவி தானிபஹனும் மகள் லட்சுமியும் சத்தியாக்கிரக ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இதனால், அவர்களுடைய வருகையைப்பற்றி அதுவரை நடந்துகொண்டிருந்த பேச்சுச் சண்டைகளெல்லாம் இப்போது உருவம் பெற்றன. குறிப்பாக, தானிபஹன் மீது கஸ்தூரிபா-வும் ஆசிரமத்திலிருந்த...
86. பனிப்போர் தூதாபாய் குடும்பத்தை ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்வது என்று காந்தி தீர்மானித்தது அவருடைய ஆசிரமத்திலிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அதே நாளில் (செப்டம்பர் 11) வெவ்வேறுவிதமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள். காந்தியின் இந்தத் தீர்மானத்தைக் கஸ்தூரிபா வெளிப்படையாக...
85. தூதாபாய் வருகை காந்தி சத்தியாக்கிரக ஆசிரமத்தைத் தொடங்குவதற்குமுன்னால் அகமதாபாத் நண்பர்களுடன் (அதாவது, ஆசிரமத்துக்குப் பொருளுதவி செய்ய முன்வந்தவர்களுடன்) பல தலைப்புகளைப்பற்றிப் பேசினார். அவற்றில் ஒன்று, இந்த ஆசிரமத்தில் தீண்டாமை பின்பற்றப்படாது. அதாவது, தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒருவரை...
84. புழுதியைப் பொன்னாக்குவார் கோகலே தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பியபிறகு, மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார், அவர்களுக்குக் காந்தியை அறிமுகப்படுத்தினார், ‘அவர் வெறும் புழுதியைக்கூட உயர்ந்த மனிதராக்கிவிடுவார்!’ குஜராத்தைச் சேர்ந்த மகாதேவ் தேசாய் என்ற இளைஞர் கோகலேவின்...
83. கைக்கெட்டிய கைத்தறி ஜூலை 17 அன்று, கஸ்தூரிபா ஒரு வேட்டியைத் துவைத்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த காந்திக்குக் கோபம் வந்துவிட்டது. வேட்டியைத் துவைப்பது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால், சத்தியாக்கிரக ஆசிரமத்தில் எல்லாரும் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளவேண்டும் என்று ஒரு விதிமுறை...
82. சிரமமும் நல்லதுதான்! ஜூலை 5 அன்று, அம்ரித்லால் தக்கர் என்கிற தக்கர் பாபா காந்தியைச் சந்திக்க வந்திருந்தார். இவர் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். ஆறு மாதங்களுக்குமுன்னால் காந்தி இந்தியாவுக்கு வந்திறங்கிய நாளில் (ஜனவரி 9) மும்பையில் நரோத்தம் மொரார்ஜி வீட்டில் கோகலே தலைமையில் காந்தியைச் சந்தித்த...