Home » சுற்றுலா » Page 4

Tag - சுற்றுலா

சுற்றுலா

அடியாத்தி, அலையாத்தி!

ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது என்றால் தெரியும்தானே? கிட்டத்திட்ட அப்படியான ஒரு வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் அலையை ஓயாமல் ஆற்றித் திரும்பக் கடலுக்கே அனுப்புவார்கள். அது சீறும் அலைகளானாலும் சரி சாந்தப்படுத்தி கடலுக்கே மீண்டும்...

Read More
சுற்றுலா

குகையில் அமர்ந்து எழுதிய நூல்கள்

விடுதலைக்கும் அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும்..? விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்து வைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க...

Read More
சுற்றுலா

கல்லால் எழுதிய கடலோரக் கவிதை

காணத் திகட்டாத கடல். உலகின் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டை. தமிழின் முதல் அச்சுக்கூடம். அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். டென்மார்க் நாட்டின் சாயலுள்ள தெருக்கள்…  இவையெல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்றால் நம்பத்தான் வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரங்கம்பாடிக்கு...

Read More
சுற்றுலா

யானையைக் கொஞ்சுவோம்!

ஒருநாள் யானைக்குத் தாயாக இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. துபாரேவுக்குப் போனால் அது நடக்கும். நன்கு குளிப்பாட்டி, வெயிலில் தலைகாய வைத்து, வயிறார ஊட்டிவிட்டு, அப்படியே தோளில் போட்டு உலவிக்கொண்டே குழந்தைகளைத் தூங்க வைப்போமில்லையா? இதைத்தான் நீங்கள் அங்கு வளரும்...

Read More
சுற்றுலா

அரபிக் கடலும் அருளும் பொருளும்

சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும்.   இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள்.  மங்களூருக்கு அருகில் அரபிக் பெருங்கடலோரம் இருக்கிறது இந்தக் கோயில். கோயிலின் ராஜகோபுரம் இருநூற்று முப்பத்தெட்டு அடியில் இருபது அடுக்குகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது...

Read More
சுற்றுலா

சாமியும் சாம்பார்ப் பொடியும்

முர்டேஷ்வர் கட்டுரை தனியாகப் படித்திருப்பீர்கள். தென் கர்நாடகத்தில் இம்மாதிரி மொத்தம் ஏழு முக்கியமான திருத்தலங்கள் உள்ளன. உடுப்பி, ஹொரநாடு, ஷ்ரிங்கேரி, தர்மஸ்தலா, முர்டேஷ்வர், கொல்லூர் மற்றும் சுப்ரமணியா என இந்த ஏழையும் சேர்த்து அங்கே சப்த க்ஷேத்திரங்கள் என்பார்கள். இவையனைத்துமே மங்களூரு மற்றும்...

Read More
சுற்றுலா

புனிதம் பூசிய நகரம்

அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாமா என்று கூட பிரிட்டிஷார் எண்ணினர். பாகிஸ்தானுக்கு அவ்வளவு பக்கம். பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் அங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புனிதத் தலம்...

Read More
சுற்றுலா

மாயக் குன்றும் மர்மக் கதைகளும்

மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த வாழ்க்கைக்குப் புதிய புதிய நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டுவந்து சேர்க்கக் கூடும். புதிய புதிய வானங்களையும்...

Read More
சுற்றுலா

பவுத்தர்கள் வழிபடும் தேவாலயம்

நம் மக்கள் சிறிது யோசித்துவிட்டுத்தான் ரசிப்பார்கள். ஆனால் ஓர் அழகு என்பது எங்கிருந்தாலும் அழகுதானே. இலங்கையின் சிங்கள, பௌத்தக் கிராமங்களுக்கென தனித்த அழகு ஒன்று இருக்கிறது. தூரத்திலிருந்து அந்தக் கிராமங்களை அண்மிக்கும் போது உங்களுக்கு முதலில் சமவெளியான வயல்வெளிகள் தெரியலாம். வயல்வெளிகளை ஊடறுத்துச்...

Read More
சுற்றுலா

உலகத்தின் முடிவு நிலம்

அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்கக் கால்கள் கற்றுத் தருகின்றன, நீண்டு நடக்கவும், நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!