மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும் கடந்து முடிப்பதையே விரும்புகிறேன். இந்தப் பயணம்கூட அப்படித்தான். இரவு முழுவதும் நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்த இரவுப்பயணம் அது. பட்டாம்பூச்சிகள்...
Tag - இயற்கை
இலங்கைத் தீவில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் அது இராவணன்- சீதாவோடு தொடர்பு கொண்ட இடமாக இருப்பது நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். நோக்கமின்றி, பாதையின்றி, என்னவென்று தெரியாத எதையோ நோக்கிப் பயணிக்கையிலும், இராவணப் பேரரசனும், சீதாதேவியும், இராமக் கடவுளும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ...
பனிக் காலத்திலிருந்து வசந்த காலத்திற்குப் பருவம் மாறும்போது நீலகிரி தன் மேனியின் வண்ணங்களை மாற்றத் தொடங்கும். பனியால் பட்டுப்போன மரங்கள் இலைகள் விடத் தொடங்கும். கறுத்துப்போன தேயிலையின் கரும்பச்சை இளம் பச்சைக்கு மாறும், அது அதிகாலை வெயில்பட்டு தளிர்களை தங்கத் துகள்களாக மாற்றும். இவற்றிற்கெல்லாம்...
அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்கக் கால்கள் கற்றுத் தருகின்றன, நீண்டு நடக்கவும், நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து...