114 பிரிவும் சந்திப்பும் ஶ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை கட்டுரையைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியதில் நிமாவைப் பற்றிய நினைவே எழவில்லை. தனக்காக அவள் என்னவும் செய்வாள் என்கிற நம்பிக்கையில் இருந்தவனுக்கு, புத்தகத்துக்கு இல்லை என்று அவள் மறுத்தது சுருக்கென்று தைத்தது. எடுத்திருப்பது எவ்வளவு...
Tag - நாவல்
113 உறவுகள் இந்திரா காந்தி எங்கேயோ இருப்பவர் என்பதாலோ என்னவோ அவர் மீதான தீவிர விருப்பத்தைப்போலவே படுகொலையின் எதிரொலியாக சீக்கியர்களுக்கு எதிரான தீவிர வெறுப்பும் இங்கே பெரிதாக இருக்கவில்லை. பெயருக்கு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் மோட்டார் உதிரி பாகங்கள் விற்கிற நான்கு சர்தார்ஜிக்களை அடித்ததோடு கடமையை...
112. வடு ‘என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா.’ ஆபீஸில் யாரோ அவனிடம் சொன்ன செய்தியை அதிர்ச்சியில் சத்தமாக எதிரொலித்தான். நெஜமாவா. நெஜமாவே சுட்டுட்டாங்களா. உயிரோட இருக்காளா போய்ட்டாளா என்றான் நடைவழிக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்திருந்த கேஷியர் விஸ்வநாதன். அவ்வளவுதான் வதந்தியா செய்தியா என்றே...
111 தத்து என்றாவது ஒருநாள் அந்த ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று மனத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசை, ரங்கன் துரைராஜை டிரைவ் இன்னில் பார்த்துத் திட்டித் தீர்த்ததுமே நிராசையாகிவிட்டது. ஆனால், அன்றிலிருந்து டிவி வாங்கியே தீருவது என்கிற வெறி உள்ளூர கனலத் தொடங்கிக் கண்ணில்...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...
109 காட்சிகள் ராம் வீட்டில் ராமசாமியைப் பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பும்போது ஷங்கர் ராமனிடம் இவன் கேட்டான், ‘எப்படி’ என்று. அவன் சொன்னான், ‘சான்ஸே இல்ல. ஒண்ணு இவர் ரொம்ப ரொம்ப ஜெனுயின் பர்சனா இருக்கணும், இல்லாட்டி கம்ப்ளீட்டா பொய்யான ஆளா இருக்கணும். இப்படி ஒருத்தர் இருக்கமுடியுமானு பிரமிப்பா...
108 நினைவுக்கு ‘படிக்கிறவா இதை ரொம்ப நாளைக்கு ஞாபகம் வெச்சிண்டிருப்பா. ரொம்ப நாளைக்கு இந்தக் கதையோட உங்களை ஐடண்டிஃபை பண்ணிப்பா.’ என்று வாய்விட்டுச் சொல்வதற்கு முன்பே சுந்தர ராமசாமியின் பெரிய முகம் பாராட்டு முறுவலுடன் விகசித்தது. அதைப் பார்த்ததே கதையைப் படித்துக் காட்டி முடித்திருந்த இவனுக்கு, ஜன்ம...
107 நகங்கள் ‘என்ன ரங்கன் எப்படி இருக்கீங்க.’ ‘ஃபைன். நீ எப்படி இருக்கே’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, ‘நான் சொல்லலே இவன்தான் அது. வெரி டேலண்டட் ஃபெலோ. கொஞ்சம் துடுக்கா பேசுவான். ஆனா மனசுல ஒண்ணும் கிடையாது. நல்ல பையன்,’ என்றார் ரங்கன் துரைராஜ் தம் அருகில் அமர்ந்திருந்த, இவன் அதுவரை...
106 முகங்கள் கவி புதுசா ஒரு கட்டுரை எழுதிக்கிட்டு இருக்காம்பா. பிரமாதமா இருக்கு. தருமுக்கு என்னய்யா. அவனுக்கு இருக்கற தெறமைக்கு எவ்ளோ வேணா எழுதலாம். சண்டையை விட்டு ஒழிச்சுட்டு அவன் இது மாதிரி மட்டுமே எழுதலாம் இல்லையா. எதைப்பத்தி எழுதிக்கிட்டு இருக்கான். ஸ்ரீலங்கா பத்தி. இங்க யாருக்குமே தெரியாத பல...
105 அரசியலும் இலக்கியமும் நமக்கு என்ன தெரியும் என்று அவ்வப்போது உள்ளூர தோன்றினாலும் சிறுவயது முதலே எழுதுகிறான் என்கிற ஒன்றே இவனுக்கு எல்லாம் தெரியும் தோற்றத்தையோ அல்லது இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு தெரிகிறது என்கிற வியப்பையோ பார்க்கிறவர்களிடம் உண்டாக்கியிருந்தது. அதை முதல் முதலில் வார்த்தைகளில்...