ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக் கண்காட்சி என்பது சென்னை மக்களைச் சிறிது குழப்பி இருக்கிறது. மூன்று நாள் சர்வதேசம் என்றால் மற்ற நாளெல்லாம் என்ன? அல்லது இம்முறை மூன்று நாள் மட்டும்தான் புத்தகக் காட்சியா? அல்லது இது தனியே அது தனியே நடக்குமா? இது முடிந்தபின் அதுவா, அது முடிந்தபின் இதுவா? சர்வதேசக் கண்காட்சிக்கும் பபாசிக்கும் சம்பந்தம் உண்டா அல்லது அரசு தனியே நடத்துமா – இச்சந்தேகங்கள் எல்லாம் இனி வரும் நாள்களில் தீர்க்கப்பட்டுவிடும்.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
Add Comment