61. புனே நகராட்சித் தலைவர்
கோகலே உள்ளூர் அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்கு நகர்ந்துவிட்டார். இனிமேலும் அவர் புனேவில் தங்கியிருந்தால் சரிப்படுமா? மும்பையைப் போன்ற ஒரு பெரிய நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.
அத்துடன், புனேவின் இரு முனை அரசியல் நெடுநாட்களாகவே கோகலேவுக்கு எரிச்சலூட்டிக்கொண்டிருந்தது. அவர் எல்லாரையும் ஒருங்கிணைத்துக்கொண்டு முன்னேற விரும்புகிறவர். அந்த முதிர்ச்சியான சூழல் புனேவில் இல்லை.
அதனால், 1902ம் ஆண்டில் கோகலே மும்பைக்குக் குடிபெயரத் தீர்மானித்துவிட்டார். அதற்கான ஏற்பாடுகளை அவர் கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் புனே நகராட்சியின் தலைவராகப் பொறுப்பேற்கவேண்டும் என்கிற அழைப்பு வந்தது.










Add Comment