62. கடலை விரும்புகின்ற உழவன்
1886 ஜூன் மாதத்தில் கோகலே டெக்கன் கல்விக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகச் சேர்ந்தார், அந்த அமைப்பு மாதந்தோறும் வழங்குகிற சிறிய படித்தொகையைப் பெற்றுக்கொண்டு இருபது ஆண்டுகளுக்குக் கல்விச் சேவையாற்றுவதாக ஒப்புக்கொண்டார்.
கோகலேவுக்கு முன்னும் பின்னும் DESல் சேர்ந்த சிலர் இருபது ஆண்டுகளுக்குள் அதிலிருந்து விலகிவிட்டார்கள், அல்லது, அதற்குள் இறந்துவிட்டார்கள். கோகலே தன்னுடைய ஏகப்பட்ட பணிகளுக்கு நடுவிலும் DESக்குக் கொடுத்த வாக்குறுதியை மீற விரும்பவில்லை, எப்படியாவது இருபது ஆண்டுச் சேவையை நிறைவு செய்துவிடவேண்டும் என்று தன்னால் இயன்றவரை முயன்றார்.
ஆனால், அவர் தேசிய அளவில் அறியப்பட்ட பெரிய தலைவராக வளர்ந்தபிறகு, புணேவில் இருந்து மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதோ, DES நடத்துகிற கல்வி நிறுவனங்களின் மற்ற பணிகளில் உதவுவதோ மிகவும் கடினமாகிவிட்டது.










சிறந்த,பண்பட்ட உரையைக் கோகலே வழங்கியிருக்கிறார்.ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை மிளிர்கிறது!