43 ரெபல் சோலாப்பூரிலிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பள்ளியைப் போன்ற கட்டடத்தில் ரேலி நிறுத்தப்பட்டது. எப்போதும் சாலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டி என்ன கட்டடத்தில் வைத்துக் கொடுக்கப்படுகிறது என்று அத்துலிடம் கேட்டான். அங்கேதான் தங்கப்போகிறோம் என்று வந்த பதில் வியப்பாக இருந்தது. மகாராஷ்ட்ரா...
Author - விமலாதித்த மாமல்லன்
![]()
42 ஈர்ப்பு ஈர்ப்பென்பது இயல்பு என ஏற்றுக்கொள்பவர்கள்கூட நம் வீட்டில் நடக்காதவரை நல்லது என்றுதான் உள்ளூர நினைக்கிறார்கள். பெற்றவர்கள் அப்படி நினைப்பதைப் பெரிய தவறென்றும் சொல்லிவிடமுடியாது. வாழ்க்கை என்ன கல்லூரிப் பேச்சுப்போட்டியா, கப்பின் மீது கண்ணை வைத்தபடி கண்மூடித்தனமாய் காதலை ஆதரிக்க. அவர்கள்...
41 மண்ணும் மனிதர்களும் ‘சுதீர் – சுதீர்’ என்று இருவரையும் அறிமுகப்படுத்திவைத்தான். அச்சா என்று சிரித்தபடி கைகொடுத்தான் சுதீர் ரவுத். சுதீரிடம், ‘என் பெயர் சி ஆர் சுதீந்தர். வீட்டில் அழைப்பது சுதீர்’ என்றான் இவனுடைய பெரியப்பா பையன். பெரியப்பா பையன் என்று அவனைச்...
40 அவஸ்தை அம்மா அப்பா என்று இரண்டு பக்கமும் கன்னடம் மராத்தி என மொழி வேறாக இருந்தாலும் இரண்டு குடும்பங்களிலும் பெரியவர்கள் சின்னவர்கள் என்கிற வித்தியாசமின்றி சிறு வயதிலிருந்தே எல்லோரும் எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். தமிழ் பிராமணர்களுக்கே இது முகம் சுளிக்கவைக்கிற விஷயமாக இருக்கையில்...
39 எதிரி அன்றைக்கும் நான்கு மணிக்கே லகுக ரங்கு ஏக்குஹேவைப் பாடி ஷா காக்கா எழுப்பிவிட்டிருந்தாலும் வெளிச்சம் வந்தபிறகுதான் தோனிலிருந்து கிளம்பிற்று பயணம். வழக்கம் போல எல்லோருடைய மூட்டை முடிச்சுகளும் லாரிகளில் ஏற்றப்பட்டுவிட்டாலும் ரேலி புறப்பட்டபாடில்லை. ஏன் இன்னும் புறப்படவில்லை என்பது...
38 சேவை தான் நினைப்பது ஆசைப்படுவது எதுவுமே நடக்காது என்பது இவனுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது. நினைக்காததாவது நடந்துவிடுமா என்றால் அதுவும் நடக்காது என்பது வேறு விஷயம். பார்க்கப்போனால், இது ஒன்றும் பிரத்தியேகமானதன்று, மனிதர்களில் பெரும்பாலோருக்குத் தோன்றுவதுதான். வாழ்வின் எதோ ஒரு...
37 முகவரி இவ்வளவு அழகான அமைதியான நடுவயதுப் பெண்களுக்குரிய முதிர்ச்சியுடன் இருக்கிற இவள் காலையில் வந்திருக்கக்கூடாதா இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கலாமே என்று இருந்தது அவள் கிளம்பிப் போவதைப் பார்த்துக்கொண்டு இருக்கையில். முறுவலித்தபடி இவனை நோக்கி வந்தவளிடம், ‘நீங்கள்...
36 களி வழக்கம்போல விடியற்காலை ‘லகுக ரங்கு ஏக்குகெ’ திரும்ப ஆரம்பித்துவிட்டது. கன்யாகுமரி விவேகானந்த கேந்திராவைத் தவிர தமிழகத்து ஊர்கள் எதிலும் அது பாடப்பட்டதாக இவனுக்கு நினைவில்லை. வெள்ளை ஜிப்பா காந்திக் குல்லாவில் பள்ளியெழுச்சி பாடித் துயிலெழுப்புகிற ஷா காக்கா – பெரியப்பா...
35 விருந்து அன்றிரவு அடித்துப் போட்டாற்போலத் தூங்கினான். தோராயமாகப் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருமுறை வருகிற பெரிய ஊர்களில் ஒரு நாள் உபரியாகத் தங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது சைக்கிள் ஓட்டுவதிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக என்றுதான் ஆரம்பத்தில் எல்லோருக்கும் தோன்றியது. கடுமையான...
34 நிகண்டு ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக வெடுக் வெடுக்கென சரளமாக விட்டெறிந்து பேசும் நாயர், வீம்பாகச் சொல்லிவிட்டுப் போனாலும் உள்ளூர பொறாமையில்தான் பேசுகிறான் என்பது இவனுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒருவன் ஒருத்தியை அன்பாலோ வசீகரத்தாலோ வென்றெடுப்பது சிலருக்குக் கிளுகிளுப்பையும்...













