ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம், பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையால் அதானி குழுமமே ஆட்டம் கண்டு நிற்கிறது. பங்குச் சந்தையில், அதன் பங்குகளின் மதிப்பு ரூ.88,000 கோடி அளவுக்குச் சரிந்து போனதாகச் சொல்கிறார்கள். உலகப் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த அதானி, இப்போது ஏழாவது இடத்திற்குச் சரிந்து விட்டார்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment