பாகிஸ்தானின் சாபம்
நூலகத்திற்கு பின்புறம் செயற்கை நீரோடை ஒன்று உண்டு. நகரத்தின் இரைச்சலிலிருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம். ஓடைக்கு அருகிலிருந்த ஒரு சிறிய சுவரில் அமர்ந்தபடி, அந்த நீர்நிலையின் அழகை ரசிக்கத் தொடங்கினேன்.
நான் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு பாகிஸ்தானியர் குனிந்து மண்ணைக் கிளறிக்கொண்டிருந்தார். சிமெண்ட் நிறத்தில் குர்தா பைஜாமா அணிந்திருந்தார். எழுந்து நின்றால் நிச்சயம் ஆறடிக்கு மேல் இருப்பார்.
அங்கிருந்து நகர்ந்தவர், சிறிது நேரத்தில் ஒரு சிறிய தள்ளுவண்டி நிறையப் பூச்செடிகளோடு மீண்டும் வந்து சேர்ந்தார். அதே இடத்தில் அமர்ந்து செடிகளை நடும் பணியைத் தொடர்ந்தார். அந்தச் செடிகளைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ள, அவர் அருகே சென்றேன்.
‘அஸ்ஸலாம் அலைக்கும் பாய்ஜான்!’, என் குரல் கேட்டு அவர் நிமிர்ந்து பார்த்தார்.










Add Comment