“பள்ளிக் கூடங்களில் நிகழும் எந்த உற்சவத்துக்கும் இனிமேல் அரசியல்வாதிகளை அதிதியாக அழைக்கக் கூடாது” பதவியேற்ற இரண்டாவது நாளே பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பேராசிரியை ஹரிணி அமரசூரிய. இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர். என். பி . பி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க அதிபராக நியமனம் பெற்றதன் பின்னர்...
Author - ரும்மான்
![]()
ஒரு பெண் அறுபதாம் பிறந்த நாளைக் கொண்டாடுவதெல்லாம் உலகச் செய்தியாக வரும் வாய்ப்பு உள்ளதா? வந்தது. சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் செப்டெம்பர் 19ஆம் தேதி, தனது அறுபதுக்கு முந்திய ஹாப்பி பர்த் டேயினைக் கொண்டாடி மகிழ்ந்தார். அங்கே ‘சிக்கியிருக்கிறார்’ என்று சொல்வது...
“என் சிறு இதயம் ஒரு மில்லியன் துண்டுகளாக உடைந்து விட்டது” எனப் பின்னூட்டமிட்டிருந்தார் ஒரு பெண். இதயத்தில் அவ்வளவு வலி தரக்கூடியது அந்த வீடியோ. வகுப்பறையொன்றில் முக்காடணிந்த பெண்கள் சுமார் முப்பது பேர். ‘ஓ’ வென்று வித்தியாசமான ராகத்தில் மேசைகளில் முகம் புதைத்து அழுகிறார்கள். தலை முதல் கால் வரை...
பதிநான்கு வயதில் நாமெல்லாம் ஓரிரு காதல்களிலோ, க்ரஷ்களிலோ நுழைந்து தீர்மானமெடுக்கத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் இப்போதைய தலைமுறையோ அந்த வயதில் காதலெல்லாம் தாண்டி, பெரிய மனிதர்கள் போல சிந்திக்கிறது. அவசரமாக வளர்ந்து அடுத்த கட்டத்துக்கும் போக எத்தனையோ காரியங்களைச் செய்கிறது...
திடீரெனப் பெரும் சலசலப்புடன் விதவிதமான புகைப்படங்கள் இண்டர்நெட் முழுக்கப் பரவத் தொடங்கின. அனைத்திலும் டிசைனர் ரக ஆடைகளுடன் ஜொலித்தார் நாமல் ராஜபக்ஷ என்கிற ராஜபக்ஷ புத்திரன். என்ன இருந்தாலும், தந்தையைப் போல, வெண்ணிற ஆடையுடன் சிவப்பு சால்வை போட்ட அவரின் ‘தேசிய’ படமளவு வேறெதுவும் எடுபடவில்லை...
ஒரு நிகழ்ச்சிக்கு மைக் செட் ஏற்பாடு பண்ணுவதெல்லாம் ஒரு காலத்தில், எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? மேடையை எத்தனை பெரிதாக அடித்தாலும், அதற்கேற்ற ஒலிபெருக்கி அமைந்தால்தான் மொத்த அரங்கமும் நிறைந்தது போல இருக்கும். ஆனால் இப்போது, ஆளுக்கொரு பஃபர் செட்டோடு அலைகிறோம். கண்டவர் கையிலெல்லாம் ஒலிவாங்கியும்...
தினமும் பயணம் போகும் ரயில் பழுதடைந்து, இன்று ஓடாது என்று அறிவித்து விட்டார்கள். இனி என்ன நடக்கும்? மொத்த நாளும் ஸ்தம்பித்துவிடும். அடுத்து என்ன செய்வதென்றே புரியாது. பிரச்சினை சரியாகும் வரை காத்திருப்பதா, செலவைப் பாராமல் வேறேதாவது வண்டி பிடித்துப் போய்ச் சேர்வதா என்று தீர்மானிப்பது கடும்...
கல்யாணத்துக்குத் தேதி குறித்து விட்டால் அடுத்தடுத்த காரியங்கள் தானாக நடக்கும். சீனாவும் தேதி குறித்து விட்டது. சரியாக 2030-ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவொன்று சந்திரனில் தரையிறங்கப் போவதாக சீனாவின் விண்வெளி மையமான CNSA தீர்மானித்துள்ளது. அந்தப் பயணத்தின் வெற்றியைப் பொறுத்து 2035-இல்...
தானுண்டு தன் பாடுண்டு என்று யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் நாடு ஜப்பான். பிராந்தியத்திலாயினும் சரி, உலகப் பொது விவகாரங்களிலும் சரி, அந்த நாடு அநாவசியமாகத் தலையிட்டதாகச் சரித்திரம் இல்லை. இருந்தும் இடைக்கிடையே உலகத் தலைப்புச் செய்திகளில் வந்து அமர்ந்து விட்டுப் போவதற்கு ஏதாவது அங்கே...
நவீன பனிப்போர் எதை அடிப்படையாக வைத்து நடக்கிறது? எந்த நாட்டிடம் அதிசிறந்த ஏ.ஐ. ட்ரோன் ஆயுதம் இருக்கிறது என்பதை வைத்துதான். தற்சமயம் கிட்டத்தட்ட பதினோரு நாடுகள் இந்த ட்ரோன்களை வைத்து உலகத்தை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சீனா இந்த இரு வாரங்களில் காட்டிய ட்ரோன் வித்தைகள் ஏராளம். தான் கெட்டது...












