மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் வந்து விட்டது. எனக்குதான் அடிவயிறு சுருட்டுகிறது. லேசாகக் கண்ணைக் கட்டுகிறது. காரணம் கீழ்க்கண்ட பத்திதான்.
//எழுதி அந்தரத்தில் நிற்கும் நாவல், ஒரு புதிய நான்பிக்க்ஷன் என இரண்டும் இந்த ஆண்டு முடித்து விட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். மனத்தில் புதிய நம்பிக்கையும் வந்திருக்கிறது. சென்ற ஆண்டு என்னிடம் இல்லாத எழுத்து ஒழுக்கமின்மை இந்த ஆண்டும் தொடர்ந்துவிடக் கூடாது என உறுதியாக இருக்கிறேன். எழுதுவதற்கு உண்டான சூழ்நிலையை வீட்டில் அமைத்து வருகிறேன். இந்த முறை தவற மாட்டேன். ஒன்றுக்கு இரண்டாக எழுதி நானும் மதுரைக்காரன்தாண்டா (எழுத்தாளண்டா) என்று அடுத்த ஆண்டறிக்கையில் தலைப்பாக வைக்க முடிவு செய்திருக்கிறேன்.//
இது சென்ற ஆண்டு ஆண்டறிக்கையில் நான் எடுத்த சபதம். நானும் மதுரைக்காரன்தாண்டா என்று தலைப்பு இந்த ஆண்டு வைக்காமல் போனதற்குக் காரணம் என்னுடைய முதல் புத்தகம் என்ற மிகப்பெரிய கனவு இந்த ஆண்டும் தள்ளிப் போனதுதான்.















Add Comment