Home » Archives for விமலாதித்த மாமல்லன்

Author - விமலாதித்த மாமல்லன்

Avatar photo

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 60

60 மொழி   இன்னும் இரண்டொரு நாட்களில் குஜராத் வந்துவிடும் எனும்போதே அஹூஜாவை கையில் பிடிக்கமுடியவில்லை. நடுத்தர வயதைத் தாண்டியவர்போலத் தொற்றமளிப்பவர்போய் இப்படிக் குதிப்பதைப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எரிச்சலுக்கு முக்கியக் காரணம், கண்ணில் படும்போதெல்லாம் இவனுக்கு இந்தி தெரியவில்லை என்பதால்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 59

59 அவரவர் உலகம்   கிடைத்த சைக்கிளைத் தனக்குத் தகுந்தாற்போல ஆக்கிக்கொண்டு என்னதான் சந்தோரில் இரவு ஓட்டிப் பார்த்துக்கொண்டாலும் காலையில் திரும்பவும் எல்லோருடனும் ரேலியில் மாலேகான் போவதற்கு முன், இடையில் பதினைந்து நாட்கள் சைக்கிள் ஓட்டாமல் இருந்துவிட்டதில் உள்ளூரக் கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 58

58 மறுப்பும் இருப்பும்   கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருந்தவளை இரண்டு மூன்று பெண்கள் கைதாங்கலாக அணைத்தபடி அழைத்துச் சென்றபின், என்ன ஆயிற்று, சுஜாதா ஏன் இந்த அளவுக்கு அழவேண்டும் என்கிற குறுகுறுப்பில் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மாடிக்குப் போனான். மதியம் பார்த்த அதே மாடிதான்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 57

57 சிரிப்பும் அழுகையும்   சைக்கிள் ரேலியில் வந்துகொண்டிருந்த லாரிகளும் பாபாவின் ஆம்புலன்ஸாக இருக்கிற வேனும் போகக் கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொன்றும் வர ஆரம்பித்திருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தான். அவ்வளவு பெரிய வண்டி புதிதாக வருவதைக்கூடக் கவனிக்காமல் இருந்தவனுடைய கவனத்தைக் கவர்ந்தது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 56

56 ஏற்றமும் இறக்கமும்   சைக்கிளோட்டிகளுக்கு மிகப்பெரிய சவால் என்று சுதீர் சொல்லிக்கொண்டிருந்த கஸாரா காட் இகத்புரிக்கு முன்னால் வந்தேவிட்டது. சாலை பார்க்கவே மிரட்டலாகத்தான் இருந்தது. ஏறக்குறைய எல்லோரையுமே இறங்கித் தள்ளிக்கொண்டு போகவிட்டிருந்தது. துரைசாமி சப்வேயில் இதே BSA SLRல் ஜெயகாந்தனை...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 55

55 ஓட்டம்   பயணத்தின் அடுத்த நிறுத்தமான பிவாண்டி வந்தும் பாம்பே பற்றிய நினைவுகள் எண்ணங்களைக் கிளறிக்கொண்டிருந்ததால் நிஜமாகவே அது இந்தியாவின் மிக முக்கியமான நகரம்தான் எனத் தோன்றியது. பாம்பே மட்டுமில்லை இந்த சைக்கிள் ரேலியே நிறைய யோசிக்கவைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பயணத்தின் முக்கியத்துவமே...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 54

54 ஹை அண்ட் லோ ‘நாளை தாராவி செல்கிறோம்’ என்று நாயர் சொன்னதற்கு ஒன்றுமே சொல்லாமல் சுதீர் அமைதி காத்ததைப் போல நாமும் வராமல் கழன்றுகொண்டிருந்திருக்கலாமோ எனத் தோன்றிற்று. இந்த சைக்கிள் பயணம் ஊர் சுற்றிப் பார்க்கும் டூர் இல்லை. மனிதர்களைத் தெரிந்துகொள்வதற்கானது. தேசத்தைப்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 53

53 பாம்பே   அம்பை வீட்டை அடைந்தது மதியத்துக்குக் கொஞ்சம் முன்னர் என்பதால் அவர் சமைத்துக்கொண்டிருந்தார். சமைக்கிற அம்பையைப் பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருந்தது. ‘அம்பை சமைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை’ என்றான். ‘ஏன் அம்பைக்குப் பசிக்காதா. அவ சாப்ட வேண்டாமா’ என்று...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 52

52 விசாலம்   லோனாவாலாவிலிருந்து பன்வேல் போவதற்கு ஏறக்குறைய பூனவிலிருந்து லோனாவாலாவுக்குப் போன நேரமே ஆனதை வைத்து இரண்டும் ஒரே தூரமாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். பன்வேலிலிருந்து பாம்பே பக்கம் என்று சுதீர் சொல்லியிருந்தான் என்றாலும் அதற்காகப் பாம்பே அதிகாலையிலேயே வந்துவிடும் என்று...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 51

51 சரிவு   போக இருப்பது லோனாவாலா. பாம்பேக்கு அருகிலிருக்கிற உல்லாச ஸ்தலம் என்று எல்லோரும் குஷியாக இருந்தார்கள். இவ்வளவு எதிர்பார்த்தால் கண்டிப்பாகக் கட்டாந்தரையில்தான் கொண்டுபோய் உட்கார வைக்கப்போகிறார்கள் என்று இவன் சுதீரிடம் கூடச் சொன்னான். ‘பாசிபிள்’ என்று அவனும் சிரித்துவைத்தான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!