52 விசாலம்
லோனாவாலாவிலிருந்து பன்வேல் போவதற்கு ஏறக்குறைய பூனவிலிருந்து லோனாவாலாவுக்குப் போன நேரமே ஆனதை வைத்து இரண்டும் ஒரே தூரமாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். பன்வேலிலிருந்து பாம்பே பக்கம் என்று சுதீர் சொல்லியிருந்தான் என்றாலும் அதற்காகப் பாம்பே அதிகாலையிலேயே வந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை.
பாபாக்கு பாம்பேவில் என்ன வரவேற்பிருக்கும் என்று நிர்வாகிகளுக்குத் தெரிந்திருந்ததால்தான் சீக்கிரமே கிளம்பவைத்திருக்கிறார்கள் என்பது விரைவிலேயே புரிந்துவிட்டது. மடாதிபதிக்குரிய மரியாதை ஒரு சமூகசேவருக்குக் கிடைப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பாபாவின் ஆம்புலன்ஸ், சைக்கிள்கள், லாரிகள் என இந்த ஊர்வலம் நூறடிக்கு நூறடி நின்று நின்று போனால் எப்போது போய்ச் சேர்வோம் என்று இவனுக்குச் சற்று ஆயாசமாகக்கூட இருந்தது.















Add Comment