இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவராகக் கருதப்படும் சட்டைமுனி சித்தர், பிறப்பால் ஒரு தேவதாசியின் மகன் என்கிறார்கள். தனது தாய், தந்தையுடன் பிழைப்புக்காக இலங்கையிலிருந்து தமிழகம் வந்த சட்டைமுனி சித்தர் வயல்வெளிகளில் விவசாயக் கூலியாக வேலைப் பார்த்திருக்கிறார். மழைப் பொய்த்து, விவசாயம் இல்லாத காலங்களில்...
Tag - ஆன்மிகம்
வாரணாசியில் அரசு அதிகாரியாக இருந்த அந்த ஆங்கிலேயரின் பெயர் பிராம்லி. அங்குள்ள ஒரு பூங்காவில் தனது மனைவியுடன் மாலை நடைப்பயிற்சியில் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு சாமியார் நிர்வாணமாகத் திகம்பரத் தோற்றத்தில் அவர்களைக் கடந்து சென்றார். தனது மனைவியுடன் நடந்து வரும்பொழுது இப்படியொரு ஆள் கடப்பது...
யோகா, தியானம் இந்த இரண்டுமே மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் வரங்கள். இவை நமது உடல், மனம் இரண்டினையும் சரிசெய்யும் சக்திவாய்ந்த கருவிகள். மூச்சுக் காற்று, உடல் இவற்றினை முறைப்படி கையாண்டு, எவ்விதம் வாழ்வாங்கு வாழ்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் கலைகள் இவை. இவற்றின் மேன்மையறிந்து வெளி நாட்டினரும்...
கருவூர் சாமியார், கருவூர் தேவர், கருவூர் நாயனார் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் கருவூரார். கொங்கு மண்டலத்தினைச் சேர்ந்த கருவூரில் பிறந்தவர் இவர். எனவே, பிறந்த ஊரின் பெயரோடு சேர்த்து கருவூரார் என அனைவராலும் குறிக்கப்படுகிறார். இவரின் இயற்பெயர் குறித்த வரலாறு தெரியவில்லை. ஆனால், இவர்...
“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே குருநாதர் பரமசிவேந்திரர், தனது சீடன் சிவராமகிருஷ்ணன் என்கிற சதாசிவப் பிரம்மேந்திரரிடம் சொன்னபோது, அந்தச் சீடனுக்கு ஞானம் வந்தது. ஏனெனில் அது...
பொதுவாகவே சித்தர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தையும், அவர்களின் ஆயுள்காலத்தையும் நம்மால் மிகச்சரியாக கணித்து அறியவே முடியாது. சித்தர்கள் அவர்களின் விருப்பக்காலம் வரை, விருப்பப்பட்ட இடங்களில் வாழும் வரம் வாங்கியவர்கள். ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் தோன்றவும், வாழவும் அவர்களால் முடியும். அவர்களின் வயது...
“இவரு பிறந்தது,வளர்ந்தது எல்லாமே கடலூர்,சிதம்பரம் பக்கமுள்ள இளவடிங்கற ஊர்லங்க. அங்க இவருக்கு மன்னாருன்னு பேரு. பள்ளிப் படிப்பு முடிச்சிருக்காரு. இவருக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் போஸ்ட்மேன் வேலை கிடைச்சிருக்கு. தபால்கள் அடங்கிய பையைச் சுமந்துக்கிட்டு ஓட்டமும் நடையுமாக ஊர் ஊராகச் சுற்றும் வேலை...
இராஜராஜ சோழனின் வம்சத்தில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மிகவும் வருத்தத்தில் இருந்தான். காரணமற்ற சஞ்சலமும் விரக்தியும் அவனை ஆட்கொண்டிருந்தது. வருத்தத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வம்சவிருத்திக்கென்று ஒரு வாரிசு இல்லாதது. இன்னொன்று என்னவென்று தெரியாத பிரம்மஹத்தி தோஷம் அவனை ஆட்கொண்டுள்ளது என்று...
பாரியென்னும் குறுநில மன்னன் சிறந்த வள்ளல் என்று பெயர் பெற்றிருந்தான். பெருநில மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே எந்த விஷயத்திலும் ஒற்றுமை இருந்ததில்லை. ஆனால் பாரி மன்னன் பெற்றிருந்த நற்பெயரும், பறம்புமலையின் இயற்கை வனப்பும், அதன் விளைபொருட்களின் சுவையும், தரமும் அவர்களின் கண்களை உறுத்தின...
பக்தனொருவன் பெற்றோர் மீதும், இறைவன் பாண்டுரங்கன் மீதும் அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அவனுக்கு இறைவன் பாண்டுரங்கன் மீது இருந்த பக்தியைவிட, ஒரு சதவீதம் அதிகமான அன்பும், மரியாதையும் அவனுடைய பெற்றோர் மீது இருந்தது. இந்தச் சிறப்பினை உலகறியச்செய்ய...













