சந்திரசேகர் அந்த அரங்கில் நுழைந்த உடனேயே அவன் கண்கள் வலதுபுறம் நோக்கித் திரும்பின. நீண்ட மேஜை. அதன் மேல் மூன்று காலி எவர்சில்வர் பாத்திரங்கள். கொஞ்சம் தேங்காய் சட்னி ஒட்டிக்கொண்டிருந்த பெரிய கண்ணாடிக் கிண்ணம். வெள்ளை வெளேர் என்று இருந்த மேஜை விரிப்பில் அங்கங்கு சாம்பார் திட்டுகளாகக் காய்ந்திருந்தது...
Tag - எழுத்தாளர்
வழக்கறிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் பத்திரிகையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் பானு. இவர் சார்ந்துள்ள இயக்கங்களுக்கு எதிரான கருத்தியல்கள் உள்ளவர்கள்மூலம் பல இடைஞ்சல்களைச் சந்தித்துள்ளார்.
அந்தக் கடற்கன்னி ஓர் இளவரசனைக் காதலித்தாள். ஆனால் கடற்கன்னியாக இருப்பதால் அவளால் அவனைத் திருமணம் செய்ய முடியவில்லை. அதற்காக அவள் சோர்ந்து விடவில்லை. தன்னுடைய மாய சக்திகளால் இடுப்புக்குக் கீழே தன் செதில்களைக் கால்களாக மாற்றி அமைத்துக் கொண்டாள். இதற்கு மேல் நீரில் தனக்கு வாழ்வு இல்லை என்று தெரிந்தும்...
நவரத்தினங்களால் ஜொலிக்கும் பேரரசர் அக்பரின் அவை. அங்கிருந்தோரின் செவிகள் அதுவரை ருசித்திராத ஓர் இசை விருந்தை நுகர்ந்து கொண்டிருந்தன. அவர்தம் விழிகள் நிகழவிருக்கும் ஓர் அற்புதத்தை எதிர்நோக்கி. இசையரசர் தான்சேனின் தீப் ராகம், அங்கிருந்த அலங்கார விளக்குகளில் சுடரேற்றிய தருணத்தில் அவர்களெல்லாம்...
39 சாமி சிதம்பரனார் (01.12.1900 – 17.01.1961) தாம் வாழ்ந்த அறுபது வருடங்களில் நாற்பது வருடங்களை மொழி மற்றும் சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டவர். ஐரோப்பியச் சிந்தனையின் தாக்கமும், தொழிற்புரட்சியால் விளைந்த மாற்றங்களும் சமூகத்தில் பரவிய காலத்தில், தமிழிலக்கிய உலகின் மரபார்ந்த தன்மைக்குள்...
விதியானது சிலரின் வாழ்க்கையில் எக்கச்சக்கமாகக் கபடி விளையாடி விடுகிறது. அப்படியானதொரு விளையாட்டில்தான் இக ஓர் எழுத்தாளனாய் உருவெடுத்தான். எந்தவொரு பத்திரிகைக்கும் ‘வாசகர் கடிதம்’ அல்லது ‘சொல்லக் கேட்டவர்’ என்று துணுக்கோகூட எழுதியறியாதவனாக ‘பெருமாளே’ என்று மனைவி அவனைத் தாக்க, அவனை மனைவி தாக்க என்று...
நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் உங்களை ஈர்த்த விஷயங்கள் எவை எனச் சிலரிடம் கேட்டோம். கவிஞர் மகுடேசுவரன் : அரங்கத்திற்குப் பத்து டோக்கன் வீதம் மதிய விருந்திற்குக் கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கடைக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முதல் பொதுமக்கள் வரை சாப்பிட்டுக்கொள்ளலாம்...
சென்னை புத்தகத் திருவிழா. வாசிப்பின்வழி தம்மை ஆக்கிரமித்த எழுத்தாளர்களை ஒரு வாசகன் தேடிக் கண்டடைவதும், அவர்களை முதன்முதலில் கண்ட போது, அந்தக் கணம் மனதில் எழுகிற பரவச நிலையைச் சொல்லில் விவரிக்க முடியாது. அச்சிதழ்கள் மூலம் ஓர் எழுத்தாளனின் படைப்பை வாசித்து, கடிதங்கள் வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்ட...













