ஒரு நாட்டு மன்னன் அண்டை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்போது தமது படைகள் தங்குவதற்கென்றும், ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் ஓர் இடத்தை ஏற்பாடு செய்வது வழக்கம். இதுபோல் உள்ள இடங்களைப் பாடிவீடு என்று அழைப்பர். அப்படித்தான் சென்னையில் அண்ணா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இடத்திற்கு பாடி என்று பெயர் வந்திருக்கிறது. சோழ மன்னர்களும் விஜய நகர அரசர்களும் இவ்விடத்தைப் பாடிவீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிறது வரலாறு. பாடி என்றால் நகரம், முல்லைநிலத்தூர் எனவும் பொருளுண்டு.
முதலாம் ராஜராஜ சோழன் தஞ்சையில் பெருவுடையார் கோவிலைக் கட்டியது போல மூன்றாம் ராஜராஜ சோழன் பாடியில் திருவல்லீஸ்வரர் கோயிலைக் கட்டியிருக்கிறார். கோயிலுக்கு நகைகள், நிலம், தோட்டங்களைத் தானமாக வழங்கியவர்கள் குறித்த பதினான்கு சோழர்காலக் கல்வெட்டுகள் கோயிலில் கண்டறியப்பட்டுள்ளன.















Add Comment