12. கோலாப்பூர் சதி
1881ம் ஆண்டின் பிற்பகுதியில், கோகலே தங்கிப் படித்துக்கொண்டிருந்த கோலாப்பூரைப்பற்றிய பரபரப்புச் செய்தியொன்று மராட்டியர்களை உலுக்கியது. ஆனால், அந்தப் புயல் புணே நகரில் மையம் கொண்டிருந்தது.
இந்தப் பரபரப்பைக் கிளப்பியவர், நானா பிடே என்ற வழக்கறிஞர். கோலாப்பூர் இளவரசர் சிவாஜி, திவான் எம். வி. பர்வே தொடர்பாக அவர் வெளியிட்ட ஓர் அறிக்கை புணே நகரின் தலைவர்கள், பெரும்புள்ளிகளையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விரைவில் அது பொதுமக்களிடையிலும் பரவத் தொடங்கியது.
அந்த அறிக்கையின் இரண்டு வரிச் சுருக்கம் இதுதான்: கோலாப்பூர் திவான் அந்நாட்டு இளவரசருக்கு எதிராகச் சதி செய்கிறார். இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா?










Add Comment