50. கனவுப் பயணத்தின் முதல் படி
1899ம் ஆண்டு, ‘நான் பம்பாய்ச் சட்டப் பேரவைக்குப் போட்டியிடப்போகிறேன்’ என்று தன் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் சொன்னார் கோகலே.
இதைக் கேட்டதும் அவர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தார்கள், நிறைய அதிர்ச்சியடைந்தார்கள்.
கோகலே சட்டப் பேரவைக்குச் செல்வது நல்ல விஷயம்தான். ஏனெனில் அவர் நேரடியாக மக்களுடன் பேசிப் பழகுகின்ற தலைவர், அவர்களுடைய சிக்கல்களை, கோரிக்கைகளை, அவற்றுக்கான தீர்வுகளைப் பொருத்தமான வாதங்கள், புள்ளிவிவரங்களுடன் முன்வைத்துப் பேசுவதில் வல்லவர். ரானடேவின் மாணவர் என்பதாலும், ஏற்கெனவே பல ஆண்டுகளாக அரசாங்கத்துக்குக் கடிதங்கள், விண்ணப்பங்கள் எழுதிப் பழகியவர் என்பதாலும் அரசு நடைமுறைகளையெல்லாம் அவர் நன்றாக அறிந்திருந்தார். அதனால் அவரால் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யமுடியும் என்பதில் அவர்களுக்குச் சிறிதும் ஐயமில்லை.









Add Comment