8. தேர்வு எழுதத் தடை
இன்றைய பள்ளிப் படிப்பு பன்னிரண்டாம் வகுப்புவரை நீள்கிறது. ஆனால், 1870களில் கோகலே மேல்நிலைக் கல்வி பயின்றுகொண்டிருந்தபோது, பத்தாம் வகுப்புதான் பள்ளி இறுதியாகக் கருதப்பட்டது. Matriculation Examination எனப்பட்ட பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அங்கிருந்து கல்லூரிக்குச் சென்றுவிடலாம்.
கோகலே தன்னுடைய பள்ளி இறுதித் தேர்வுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரம், அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரை அழைத்துப் பேசினார், ‘கோபால், இந்த ஆண்டு நாங்கள் உன்னை Matriculation Examinationக்கு அனுப்ப இயலாது.’
இதைக் கேட்ட கோகலே அதிர்ந்துபோனார், ‘ஏன் ஐயா? நான் என்ன தவறு செய்தேன்?’










Add Comment