கொளுத்தும் வெயிலில் குழந்தைக்கு சுகமில்லாமல் போவதைப்போன்ற ஒரு கஷ்டம் இருக்கிறதா என்ன..? மொத்த வீடும், சில கணங்களில் அல்லோலகல்லோலப்பட்டு விடும். குறிப்பாகக் கோடைக் காலத்து இன்ப்லுவென்ஸாவோ, வியர்க்குருவோ, எது வந்தாலும் சரி, அசௌகரியத்தை சரியாகச் சொல்லத் தெரியாத குழந்தைகள் பெற்றோரைப் பாடாகப் படுத்தி...
Author - ரும்மான்
நோன்பு பிறக்கிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பலத்த ஏற்பாடுகளுடன் நோன்பை வரவேற்கும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் விதம் விதமான தடபுடல்கள் இடம் பெற்றாலும், அடிப்படையில் அனைவரது நோக்கமும் ஒன்றே. பிறக்கும் இந்த மாதத்தில் தங்குதடைகளின்றி நோன்பு நோற்று, அருள் நிறைந்த...
“அடுத்ததாக, உங்களை மகிழ்விக்க வருகிறார்கள் திக்வெல்ல களிகம்பாட்டக் குழுவினர்” கணீரென ஒலிக்கிறது தொகுப்பாளரின் குரல். எட்டுப்பேர் கொண்ட குழு நடன நிகழ்ச்சி அது. ஒரு கை குறைந்தாலும் பிசகிவிடும். தலைப்பாகையும் பாரம்பரிய நடன அலங்காரமும் தரித்த இளைஞர்கள், கையில் வர்ணக் கோல்களுடன் ஒவ்வொருவராக...
‘சோபியா’ இளஞ்சிவப்பு வர்ணச் சேலை கட்டியிருந்தாள். கல்கத்தா நகரத்துக் கல்லூரி மேடையொன்றில் ஆரத்தி எடுக்கப்பட்டு அமோகமாக வரவேற்கப்படுகிறாள். அவளது முகம் மகழ்ச்சியில் பிரகாசிக்கிறது. கல்லூரியின் மாணவர்களைப் பார்த்து, “உங்களது முகங்களில் நம்பிக்கை தெரிகிறது! நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”...
இலங்கையின் இளம் தலைமுறை பாஸ்போர்ட் ஆபீஸ்களின் வாசல்களில் நிற்கிறது. அல்லது விமானநிலைய டிபார்ச்சர் வரிசையில் பாஸ்போர்ட்டை ஏந்திக் கொண்டு நிற்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், புரியாத அரசியல் குழப்பங்கள், என்றைக்குமே தீராத இனமுரண்பாடுகளுடன் மல்லுக்கட்டி எப்படியோ பிழைக்க முயன்றால் புதிதாய் விதித்து...
வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது...
டைம் மிஷினில் மூன்று வருடங்கள் பின்னோக்கி வந்து விட்டோமா என்பது போல இருந்தது அந்தக் கல்யாண விருந்து. ‘கையெழுத்துப் போட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலே போதும்’ என்று ஒரு சிறு விருந்துடன் நடந்து கொண்டிருந்த இப்போதைய திருமணங்களை ஒரு நிமிடம் மறக்கச் செய்தது இந்த வைபவம். மாப்பிள்ளை கை நிறைய...
‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது...
“நிலைமை கைமீறிப் போய்விட்டது. எல்லா சத்திர சிகிச்சைகளும் கால வரையறையின்றிப் பிற்போடப்படுகின்றன” தீயாய்ப் பரவுகிறது அந்தக் குறுஞ்செய்தி. பேராதனை போதனா மருத்துவமனையில் பணிப்பாளரின் கையொப்பத்துடன் ஊடகங்களில் பவனி வருகிறது அறிக்கை. ஏற்கனவே, கொதிக்கும் எண்ணெய்த் தாழியிலிருந்த தேசம்...
வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற பிரார்த்தனைகளால் சூழப்பட்டிருந்த ஆறு வயது மகன் பூரண சுகம் பெற்று வெளி உலகைத் தரிசித்த நல்வருடம் இது. மஹரகம புற்று நோய் வைத்தியசாலையும் கையுமாக ஓடிக்கொண்டிருந்த...