சிரஞ்சீவி
ஒவ்வொரு மொழியிலும் திறமையான நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அனைவராலும் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடிந்ததில்லை. உதாரணமாக ரஜினி-கமல். ரஜினி தனது வியாபார எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே சென்று உச்சியில் அமர்ந்து கொண்டார். என்னதான் போராடினாலும் கமலால் அந்த எல்லைக்குச் செல்லவே முடியவில்லை.
ஆனால் தெலுங்கில் கதையே வேறு. சிரஞ்சீவி தனிக்காட்டு ராஜாவாக இருந்தார். அங்கு மெகா ஸ்டார் என்றால் சிரஞ்சீவிதான். நாகார்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா எல்லாரும் அடுத்ததுதான். சிரஞ்சீவியின் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு திருவிழா. தமிழகத்தை விட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தைக் கொண்டது ஆந்திரா. அவர்கள் திரைப்படங்களைப் படங்களாகப் பார்க்கவில்லை. கொண்டாட்டமாகத்தான் பார்த்தனர்.
எங்கும் எதிலும் மிகைப்படுத்தல். லாஜிக் என்பதெல்லாம் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான். பாடல்களும் சண்டைக்காட்சிகளும்தான் அவர்களுக்கு முழுச் சாப்பாடு. அதை வகையாகப் பரிமாறினார் சிரஞ்சீவி.










Add Comment