Home » நாள்தோறும் » Page 38

Tag - நாள்தோறும்

சலம் நாள்தோறும்

சலம் – 16

16. சாபம் கிராத குலத்துச் சாரன் ஒருவனின் மனத்துக்குள் புகுந்து தன்னுடைய சரிதத்தைத் தானே எழுதிக்கொள்ள அந்தச் சூத்திர முனியால் எப்படி முடிந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? இது கலையல்ல. மாயமந்திரமல்ல. அற்புதமோ அதிசயமோ அல்ல. இது ஒரு விஞ்ஞானம். எதுவும் ஒன்றென உணர்ந்தவர்களுக்குப் புரியும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 15

15. கசப்பில்லை, பகையில்லை கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள இந்தியர்களின் நலனுக்காகக் காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை இங்குள்ள இந்தியர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்திவிடவேண்டும் என்கிற அவருடைய ஆர்வம்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 15

15. சூத்திர முனி யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமக்கெதிராக ஒரு குரலை வாழ்நாளில் அவர்கள் கேட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்காது. தவிர, ஓர் எறும்பு எழுந்து நின்று பேசுவது போல நான் ஆவேசப்பட்டது அவர்களுக்கு வினோதமாகவும் இருந்திருக்க வேண்டும். சில விநாடிகளுக்கு அவர்கள் யாரும் பேசவேயில்லை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 14

14. மென்மையின் மேன்மை 1912 நவம்பர் 17. கோகலே தன்னுடைய தென்னாப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். கோகலேவைப் பிரிவது காந்திக்கு எப்போதும் வருத்தம்தான். ஆனால், இந்தமுறை அவர் மனத்தைத் தேற்றிக்கொள்வதற்கு இரண்டு விஷயங்கள் இருந்தன. முதலில், கோகலேவின் வருகை தென்னாப்பிரிக்கச்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 14

14. குறி இன்றைக்கு உனக்கு அம்பெய்யக் கற்றுத்தருகிறேன்; புறப்படு என்று என் தகப்பன் சொன்னான். உடனே அம்மா ஓடிச் சென்று, என்றோ பத்திரப்படுத்தி வைத்திருந்த காட்டெருமையின் கீழ்வரிசைப் பல் ஒன்றை எடுத்துச் சிறிய துணியில் முடிந்து என் வலது தோளில் தாயத்தாகக் கட்டிவிட்டாள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 13

13. ஓர் அவசரப் புத்தகம் ‘இந்தியா விடுதலையடைவது முக்கியம்தான். ஆனால் அதற்காக, நாளில் இருபத்து நான்கு மணிநேரமும் அதைப்பற்றியேதான் சிந்தித்துக்கொண்டிருக்கவேண்டுமா?’ என்று சிலர் கோகலேவிடம் கேட்டதுண்டு, ‘நீங்கள் பெரிய அறிஞர், செயற்பாட்டாளர். அவ்வப்போது மற்ற பிரச்சனைகள்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 13

13. அருளும் பொருளும் ஹேமந்த ருதுவின் முதல் சுக்ல பட்சம் தொடங்கியிருந்தது. காற்றே உறைந்துவிட்டாற்போல வெளியை துஷாரம் குவிந்து நிறைத்திருந்தது. தருக்களின் இலைகளிலும் கிளைக் கொம்புகளிலும் தடித்த தேகத்திலும்கூட வெண்படலம் மேவியிருந்தது. குருகுலத்தில் இருந்த பதினெட்டு பர்ணசாலைகளின் மேற்கூரைகளும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 12

12. மின்மினி அவன் வயதைக் கணிக்க முடியவில்லை. ஒரு கணம் என் தகப்பனின் வயதுதான் இருக்கும் என்று தோன்றியது. உடனே அவன் இன்னும் மூத்தவனாக இருப்பான் என்றும் தோன்றியது. சட்டென்று இரண்டுமில்லை; அவன் வலு குன்றாத ஒரு வயோதிகன் மட்டுமே என்று நினைத்தேன். ஏழடி உயரம் இருந்தான். ஓடத்தின் துடுப்பை நிமிர்த்தி...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 12

12. டால்ஸ்டாய் பண்ணை கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது காந்தி ஒரு புதுமையான சமூகப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். அதன் பெயர், ‘டால்ஸ்டாய் பண்ணை.’ புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் படைப்புகள் காந்திக்கு மிகவும் விருப்பமானவை. அவர் எழுதுகிறவற்றைச் சும்மா படித்துவிட்டுச்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 11

11. மராத்தியில் பேசுங்கள் தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டத்தைப்பற்றிக் கோகலேவுக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். ஆனாலும், உள்ளூர்க்காரர், பல ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தில் களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கிற தலைவர் என்றமுறையில் காந்திக்கு அவரைவிடக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்குமல்லவா? அதனால், ஜொகன்னஸ்பர்க்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!