Home » பா. ராகவன் » Page 16

Tag - பா. ராகவன்

சலம் நாள்தோறும்

சலம் – 24

24. காட்சி ரூபம் ‘உன்னை நான் எதற்காக நம்ப வேண்டும்? ஏன் உன்னுடன் வர வேண்டும்?’ என்று இரண்டு காதங்கள் கடந்த பிறகு அந்த முனியிடம் கேட்டேன். அவன் வழக்கம் போலச் சிரித்துவிட்டு அமைதியாகவே இருந்தான். நடப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னேன், ‘எனக்கு இதற்கு நிச்சயமாக பதில் தெரிய வேண்டும்.’ இப்போது அவன் சொன்னான்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 23

23. கள்வன் சாரனின் சிந்தையில் சூத்திர முனி திருத்தியும் விரித்தும் எழுதிய அந்தச் சம்பவத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்துப் பார்த்தேன். நான் அதர்வன். எங்கிருந்தாலும் எந்தப் பணியில் இருந்தாலும் என் கவனத்தின் ஒரு பகுதி அவனது இருப்பிலும் செயல்பாட்டிலும்தான் மையம் கொண்டிருக்கும். ஒரு விதத்தில் அது...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 22

22. விபூதி அனுபூதி என்று முதலில் நினைத்தேன். உட்செவியில் ஒலிக்கும் குரலைக்கூட அதனோடு தொடர்புறுத்தித்தான் ஏந்தி எடுத்துக்கொள்வேன். உணர்வின் அடியாழத்துக்கும் அப்பால் இருந்து ஓங்கி ஒலிக்கிற குரல். அது எனக்கு மட்டும் கேட்பது. இன்னொருவருக்கல்ல. வேறு யாருக்குமல்ல. மந்திரங்களாக இதுவரை கேட்டது, முதல் முறை...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 21

21. தரிசனம் அந்தக் கிராத குலத்துச் சாரனிடம் ஒரு சிக்கல் உள்ளது. ஆரியர்களின் நம்பிக்கைகள் சார்ந்தும் தேவர்களின் துணையுடன் ரிஷிகளாலும் முனிகளாலும் நிகழ்த்தப்படும் அற்புதங்கள் சார்ந்தும் அவனுக்குள்ள இகழ்ச்சி மனப்பான்மையைச் சொல்கிறேன். மயிர்க்கூச்செரிய வைக்கும் தருணமொன்றை நான் அவனிடம் விவரித்தேன். எனது...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 20

20. கன்னுலாக்கள் நான் கிராத குலத்தைச் சேர்ந்த சாரசஞ்சாரன். ஆதிசிவக் குன்றில் சர்சுதி உற்பத்தியாகும் இடத்துக்கு இருபது காதங்களுக்கு அப்பால் கின்னர பூமியில் உள்ள முஞ்சவத்திலிருந்து வருகிறேன். நிகரில்லாப் பெருமன்னன் சம்பரனின் ஆயிரம் கற்கோட்டைகளுள் ஒன்றன் உறுப்பெனத் திகழ்ந்த தெய்வீகக் கல்லின்மீது...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 19

19. வஜ்ரத்வனி மழைக்காலம் தொடங்கவிருந்தது. குருகுலத்தில் மேகாம்பர பூஜை செய்து, மூன்று நாள்கள் இடைவிடாமல் வர்ஷ யக்ஞம் நடத்தி முடித்தோம். யக்ஞம் நிறைவடைந்த ஒரு நாழிகைப் பொழுதுக்குள் முதல் தூறல் விழத் தொடங்கிவிட்டது. மாணாக்கர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து சரஸ்வதியின் கரைக்கு ஓடிச் சென்று ஆனந்தக்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 18

18. ரிதம் தமாலபத்ரத்தினும் வீரியம் கொண்ட மூலிகையொன்று எனது பர்ணசாலையின் தெற்கே உள்ள சிறு வனத்திலேயே இருக்கிறது என்று சம்யு சொன்னான். மயோபுவின் ஆசிரமத்தில் இயற்றப்பட்ட யாகத்துக்குச் சென்றிருந்தபோது பேச்சுவாக்கில் அவன் இதனைக் குறிப்பிட்டதும் ‘நீ எப்போது அங்கே வந்தாய்?’ என்று கேட்டேன். அவனுக்கு...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 17

17. ஒற்றைப் புல் நான் பிராயங்களை அறியாதவன். மழலைப் பருவத்தையும் வளரும் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் வயோதிகத்தையும் என்றுமே உணர முடியாதவன். அவற்றின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் அறிய ஒண்ணாதவன். தாயும் தகப்பனுமின்றித் தோன்றியவன் என்பதால் பாசம் என்ற அடிப்படை மானுட உணர்ச்சியின் ருசியை அறியமாட்டேன்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 16

16. சாபம் கிராத குலத்துச் சாரன் ஒருவனின் மனத்துக்குள் புகுந்து தன்னுடைய சரிதத்தைத் தானே எழுதிக்கொள்ள அந்தச் சூத்திர முனியால் எப்படி முடிந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? இது கலையல்ல. மாயமந்திரமல்ல. அற்புதமோ அதிசயமோ அல்ல. இது ஒரு விஞ்ஞானம். எதுவும் ஒன்றென உணர்ந்தவர்களுக்குப் புரியும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 15

15. சூத்திர முனி யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமக்கெதிராக ஒரு குரலை வாழ்நாளில் அவர்கள் கேட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்காது. தவிர, ஓர் எறும்பு எழுந்து நின்று பேசுவது போல நான் ஆவேசப்பட்டது அவர்களுக்கு வினோதமாகவும் இருந்திருக்க வேண்டும். சில விநாடிகளுக்கு அவர்கள் யாரும் பேசவேயில்லை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!