வெனிசுவேலாவை ‘மிராஃப்ளோரேஸ்’ அரண்மனையிலிருந்து பதின்மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் நிக்கோலஸ் மதுரோ. ஒரு நாட்டின் அதிபர் என்றும் பாராமல் அவரை ஒரு நள்ளிரவில் சிறைபிடித்து வந்தது அமெரிக்க அரசு. கூடவே அவரது மனைவி சீலியா ஃப்ளோரெஸ்ஸும் கைது செய்யப்பட்டார். இப்போது இருவரும் நியூயார்க் நகரின் புரூக்ளின் மெட்ரோபாலிடன் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அமெரிக்க அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சிறை வளாகம். இங்கு விசாரணைக் கைதிகளைத் தற்காலிகமாகத் தங்க வைப்பார்கள்.
எதன் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?
2020ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் நீதித்துறை, நியூயார்க் நீதிமன்றத்தில் ஒரு குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. அதன்படி, மதுரோ மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ‘போதைப் பொருள் பயங்கரவாதம்’ (narco-terrorism), ஊழல், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.















Add Comment