அணு
அணுசக்தியின் அபாயங்களை அமெரிக்காவைப் போல அறிந்தவர்கள் யாரும் இல்லை. ஜப்பானில் முதல் அணுகுண்டு வீசிய நாடல்லவா? அதனாலோ என்னவோ அணு ஆயுதங்கள் பரவலைத் தடுக்க ஒபாமா சில முயற்சிகளை முன்னெடுத்தார்.
1945 ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி, நாகசாகி நகரின்மீது அணுகுண்டு வீசப்பட்டது. எழுபதாயிரம் மக்கள் ஒரு நொடியில் மறைந்தனர். கதிரியக்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. பிறந்த குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் தோன்றின.
உலகம் இன்னும் அமெரிக்காவை அச்சத்துடன் நினைப்பதற்கான காரணங்களுள் முதன்மையானது அது. அதைத்தான் மாற்ற வேண்டுமென்று ஒபாமா நினைத்தார். இன்னொரு நாகசாகி வேண்டாம் என்று அவர் பேசியதற்கு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டதல்ல காரணம். அடிப்படையில் அவரது இயல்பு அதுவாகவே இருந்தது. பலருக்கு இது தெரியாது. வாஷிங்டனில் அணு ஆயுதப் பயன்பாடு / கட்டுப்பாடு சார்ந்து விவாதிப்பதற்கான மாநாடு ஒன்றை அவர் ஏற்பாடு செய்தார்.














Add Comment