‘வாசிப்பவர், இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கிறார். வாசிக்காதவருக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான்.’ ஜார்ஜ் மார்ட்டினின் புகழ்பெற்ற வரிகள் இவை.
வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது, ஜென் ஸீ தலைமுறை வாசிப்பதே இல்லை. இது சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்து, ஆனால் இது முற்றிலும் உண்மையில்லை என்று தெரிவிக்கின்றன ஆய்வுகள். ஜென் ஸீ இளைஞர்கள் வாசிக்கின்றனர், அவர்கள் ரசனையும் வாசிக்கும் ஊடகமும் நவீன யுகத்துக்குத் தகுந்தவாறு மெருகேறி இருக்கிறது என்கின்றன.
பதின்மூன்று முதல் இருபத்து எட்டு வயதுவரை உள்ளவர்கள் ஜென் ஸீ தலைமுறை என்று அறியப்படுகின்றனர். வெள்ளிக் கரண்டியைப்போல இவர்கள் இணையக் கரண்டியுடன் பிறந்தவர்கள். வானில் நிலவைப் பார்த்ததைக் காட்டிலும் இவர்கள் ஃபோனில் பார்த்துச் சாப்பிட்டதுதான் அதிகமாக இருக்கும்.














Add Comment