35. பிண்டம்
ஆடுகழைக் காட்டில் அவன் வசித்து வந்த குடிசைக்கு முதலில் அபுதுவும் காளத்தியும் சென்றார்கள். இருவரும் அப்போது வராகத்தின் உருவுக்குள் இருந்தார்கள். புறப்படும்போது அபுது சொன்னான்,
இந்த உருவில் என் தந்தை என்னைக் கண்டுகொண்டால் எந்தப் பிறவியிலும் உங்களை இனி அண்டவிட மாட்டார்.
நாயனார் முறுவல் செய்தார்.
ஏன் சிரிக்கிறீர்கள்?
இரண்டு காரணங்கள். முதலாவது, உன் தந்தைக்கோ, வேறு யாருக்குமோ நீ இப்போது யாரென்று தெரிய அவசியமில்லை. இரண்டாவது, உன்னை நான் இன்னொரு பிறவிக்காகத் தயார் செய்யவில்லை.










Add Comment