ஒட்டோமான்களின் வருகை
இன்றைய நவீன சிரியாவின் உருவாக்கத்தில் ஓட்டோமான் ஆட்சிக்கு முக்கியப் பங்குண்டு. தொடர்ச்சியாக நானூறு ஆண்டுகள் சிரியாவை ஆட்சி செய்தனர் ஓட்டோமான்கள்.
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தானாக இருந்தவர் முதலாம் செலிம். அவரது ஆட்சியில் தீவிரமாகத் தன் எல்லைகளை விரித்தது ஓட்டோமான். சஃபாவிட் சாம்ராஜியத்தை வீழ்த்தி பெர்ஷியாவைக் கைப்பற்றினர். பிறகு தெற்கு நோக்கி சிரியாவின் மேல் பார்வையைத் திருப்பினர்.
அங்கு நிலவிய சூழல் செலிமுக்குச் சாதகமாக இருந்தது. அப்போது கெய்ரோவில் இருந்து சிரியாவை ஆண்டு கொண்டிருந்தார் மாம்லுக் கான்ஸ் அல்-குரி. எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவர், தன் ஆட்சியின் அந்திம காலத்தில் இருந்தார்.











Add Comment