தவாங் – அருணாசலப் பிரதேச மாநிலத்திலிருக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதி. கடல் மட்டத்திலிருந்து பதினோராயிரம் அடிக்கும் மேல் உயரத்திலிருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பிரதேசம். பிரம்மாண்டமான நீர் வீழ்ச்சிகளைக் கொண்டது. இந்தப் பகுதியைச் சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்ற இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. சீன – பூட்டானின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியைத்தான் சீன ராணுவம் குறிவைத்திருக்கிறது. இந்தப் பகுதியை ஆக்கிரமிப்பதன் மூலம் திபெத்தையும், அருணாசலப் பிரதேசத்தையும் முழுமையாக எட்டிப் பார்க்க முடியுமென்பது சீனாவின் பேராசை.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment