சென்னை வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. 88 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சுமார் 394 கோடி பொருட்செலவில் கட்டியிருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் திறப்பு விழாக் கண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத் திறந்து வைத்தார். டிசம்பர் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்காக என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன, சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை அறிய கிளாம்பாக்கத்திற்கு விசிட் செய்தோம்.
இதைப் படித்தீர்களா?
பொதுச்சேவையில் அக்கறைகொண்ட நாம் ஏன் அரசியலில் பங்கேற்கக்கூடாது என்ற கேள்விக்கான விடையாகப் புதிய கட்சியொன்று உதயமானது.
உலகத் தரத்திலான இத்தனை பெரிய நூலகத்தில், உலகின் மூத்த மொழியான தமிழுக்கும், உருதுவுக்கும் இன்னும் ஒரு அலமாரி ஒதுக்கப்படவில்லையே என்பது சங்கடமாக...














Add Comment