வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில நேரங்களில் இந்த நோய்க் காரணிகள் தப்பி விடுகின்றன..? இதற்கு விடையை அறிந்து கொண்டால்தான் இம்யூனோதெரபி சிகிச்சையைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கேள்விக்குப் பல பதில்கள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, புற்றுநோய் எவ்வாறு பல நேரங்களில் தந்திர வேலைகள் செய்து நமது நோயெதிர்ப்பு சக்தியின் பார்வையிலிருந்து தப்பித்துக்கொள்கிறது என்பதில் உள்ளது.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment