செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு இந்த வாரம் புதுதில்லியில் நடைபெறுகிறது. உலகெங்கிலும் ஏஐயின் முகங்களாக அறியப்படும் பல்வேறு வல்லுநர்களும் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
கூகுளின் சுந்தர் பிச்சை, ஓப்பன் ஏஐயின் தலைவர் சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமோடாய் உள்ளிட்ட பலரும் இதில் பங்குபெறுவது ஏஐ ஆர்வலர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டுக்கு வருகின்றனர்.
இன்றைக்கு ஏஐயின் பயன்பாடு அனைத்துத் துறைகளிலும் வியாபித்துள்ளது. மருத்துவம் தொடங்கி விளையாட்டுகள் வரை எங்கெங்கும் ஏஐயின் தாக்கம் அனுதினமும் அதிகரித்துவருகிறது. எனவே அதன் முறையான பயன்பாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டியுள்ளது. பல்வேறு தேசங்களின் அரசுகளும் இப்பணியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கவனம் செலுத்துகின்றன. இச்சூழலில்தான் இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.















Add Comment