சந்து சாட்சி
நூலகத்தின் நுழைவாயிலில் ஓர் இளைஞனைப் பார்த்தேன். சுருட்டை முடி, திடகாத்திரமான உடல். அவன் அணிந்திருந்த தொளதொள கால்சட்டை, அவனை ஒரு கல்லூரி மாணவனாகக் காட்டியது.
நேராக வரவேற்பறைக்குச் சென்றவன், அங்கிருந்த ராஷீத்திடம் அரேபிய இலக்கியப் பிரிவு எங்குள்ளது என்று கேட்டான். அவனது பெயர் அஹ்மத். எகிப்தின் ஆகச்சிறந்த எழுத்தாளரான நஜிப் மஹ்ஃபூஸின் (Naguib Mahfouz) புத்தகங்களை வாசிக்க வந்ததாகச் சொன்னான்.
மஹ்ஃபூஸைப் பற்றி எனக்கு அதற்கு முன்பு அறிமுகமில்லை. அவன் ஆர்வமாகப் புத்தகங்களைத் தேடுவதைப் பார்த்து நானும் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவல் கொண்டேன். தொலைபேசியில் எழுத்தாளரின் பெயரைத் தேடிப் பார்த்தேன். 1988இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் அரபு எழுத்தாளர்.









Add Comment