88. வேறொருவன்
உதுமானி நாயனாரின் மாணாக்கர்கள் ஆளுக்கொரு புறம் சென்று உணவு தேடி உண்டுவிட்டு, சார்வாகன் உண்பதற்குச் சில கனி வகைகளையும் கிழங்குகளையும் கொண்டு வந்தார்கள். நெடுநேரமாக ஒரு சொல்கூடப் பேசாமல் அமைதியாகவே இருந்த சார்வாகன், உண்பதற்குரியவற்றை எதிரில் கண்டதும் சட்டென்று முகம் மலர்ந்தான்.
சித்தனே, உன்னிடம் ஒன்று கேட்கலாமா?
கேள் என்று நாயனார் சொன்னார்.
உன்னால் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், நினைத்த பொருள்களைக் கொண்டு வர முடியும் என்பதை நானறிவேன். நீயும் உன் குருநாதனும் என்னை அடைத்து வைத்திருந்தபோது எனக்குரிய உணவை அப்படித்தான் நீ தருவித்தாய்.
ஆம். முடியும்.











Add Comment