136. அண்டோனியா மைனோ காஷ்மீரிலிருந்து இந்திரா காந்தி டெல்லி திரும்பியதும், பிரதமர் சாஸ்திரியை சந்தித்தார். காஷ்மீரில் இருந்த நாள்களில் தனது செயல்பாடுகளை எல்லாம் பெருமையோடு விளக்கினார். தொடர்ந்து இந்தப் போரில் இந்தியா எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறும் ஓர் அறிக்கையை அவரிடம்...
Tag - இந்திரா காந்தி
135. இரண்டாம்இடம் யாருக்கு? பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியிடம் தனது அமைச்சரவையில் அவரும் இடம்பெற வேண்டும் என்று கேட்டபோது, அவர் தன் தந்தையை இழந்த சோகத்தைக் காரணம் காட்டி தனக்கு விருப்பமில்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டாலும், சாஸ்திரி விடுவதாக இல்லை. ‘அமைச்சரவையில் இந்திரா காந்தி...
133. நாற்காலி ஆசை ஜவஹர்லால் நேருவின் மரணம், சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றது. பதவியில் இருக்கும்போதே மறைந்த இந்தியப் பிரதமரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் ஏற்பாடு செய்யும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியின் இறுதி...
131. தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் காமராஜ் “கிங் மேக்கர்” என அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவர் இந்திரா காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியதுதான் என்பது சரித்திரம். அதற்கான ஒரு பூர்வாங்க ஏற்பாடுதான் இந்த கே பிளான் என்பது அன்றைய அரசியல் விமர்சகர்கள் கருத்து. நேருவின் சகாக்களான மூத்த காங்கிரஸ்...
126. சுதந்திரா கட்சி தந்தை ஃபெரோஸ் காந்தியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ராஜிவ், சஞ்சய் இருவரும் தங்களது டேராடூன் பள்ளிக்குத் திரும்பிய பிறகு இந்திரா மிகவும் தனிமையாக உணர்ந்தார். அப்போது அவர் ராஜிவுக்கு ஒரு கடிதம் எழுதி தன் சோகச் சுமைகளைப் பகிர்ந்துகொண்டார். “(ஃபெரோசின் மறைவால்...
125. பிரியாத பந்தம் இன்றைக்கு நடக்கும் காதல் திருமணங்கள் பல வெகு சீக்கிரமாகவே தோல்வி அடைந்து விவாகரத்து கோரி நீதி மன்றத்தை நாடுவதைப் பார்க்கிறோம். அந்தக் காலத்தில் தோல்வி அடைந்த காதல் திருமணங்கள் கோர்ட் வரை அதிக அளவில் போகவில்லை. ஆனால், அவர்களுக்கு இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே...
124. ஃபெரோஸ் மரணம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனதும் இந்திரா கட்சியின் காரியக் கமிட்டியில் இருந்து தன் தந்தை நேருவை நீக்கிவிட்டார். இது ஒரு ஸ்டன்ட் என்றால் அது மிகையில்லை. காரணம், காரியக் கமிட்டி உறுப்பினர் என்ற அந்தஸ்த்து இல்லாது போனாலும் நேருவுக்கு, காரியக் கமிட்டிக் கூட்டங்களுக்கு நிரந்தர...
மத்தாய் ராஜினாமா இந்தியப் பிரதமரின் மருமகன் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் ஜெயித்து பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். பாராளுமன்றத்தில் அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். டால்மியா ஜெயிலுக்குப் போனது. முந்த்ரா ஊழலில் டி.டி.கே. பதவி இழந்தது. இவற்றை அடுத்து...
116. இன்சூரன்ஸ் மோசடிகள் ஆயுள்காப்பீடு என்பது 1818ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான ஒரு சமாசாரம். இந்திய மண்ணில் தொடங்கப்பட்ட முதல் இன்சூரன்ஸ் கம்பெனி ஒரியண்டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிதான். அந்தக் கால இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஐரோப்பியர்களின் தேவைகளைத்தான் கவனித்தனவே ஒழிய...
115. நேரு மீது வெறுப்பு அரசாங்கப் பொறுப்பு, கட்சிப் பொறுப்பு என எதிலும் இல்லாவிட்டாலும் நேருவின் மகள் என்ற ஒரு பெரிய தகுதியில், அப்பாவுக்கு உதவியாக இருந்தார் இந்திரா. குறிப்பாக, நேரு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்திராவும் கூடவே சென்றார். 1952 குடியரசு தினம்...













