Home » காங்கிரஸ் » Page 6

Tag - காங்கிரஸ்

இந்தியா

சாதிப்பாரா நிதிஷ்குமார்?

இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் நிதிஷ்குமார் முதல் முறை பிகார் முதல்வராகப் பதவியேற்றார். பல ஆண்டுகள் காத்திருந்து நிறைவேறிய கனவு அது. ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. ஆர்ஜேடிக்கும் நிதிஷ் கூட்டணி எல்எல்ஏக்களுக்கும் இருந்த வித்தியாசம் ஒரு கை விரல் எண்ணிக்கைக்கும் குறைவே. இருதரப்புமே பெரும்பான்மை...

Read More
இந்தியா

கூடித் தொழில் செய்

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகாரில் கூடி ஆலோசனை செய்துள்ளார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டும் நிகழ்வு பிகாருக்குப் புதிதல்ல. கட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை. ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசினால் உடனே சிறைவாசம். அரசின் அத்தனை அமைப்புகளும் பாய்ந்து...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை- 56

56. வைஸ்ராய் – காந்திஜி சந்திப்பு இந்திய அரசியல் சூழ்நிலை அமைதியாய் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருக்க, வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு முக்கிய இளம் தலைவர்களான ஜவஹர்லால் நேருவையும், சுபாஷ் சந்திரபோஸையும் பிடித்து உள்ளே போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு சிலர் ஆலோசனை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 55

 தலைவர் நேருஜி அன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டுக்கும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அது கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது; அத்தகைய ஒரு தலைவர் காந்திஜிதான் என்ற அபிப்ராயம் காங்கிரஸ் கட்சியில்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 53

53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

Read More
உலகம்

மக்களே, கடன் கொடுங்கள்!

‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச் சில நகைச்சுவைத் துணுக்குகளை நீங்கள் படித்திருக்கக் கூடும். கடந்தசில வாரங்களாக அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்தப் பேச்சு வார்த்தை நடத்திக்...

Read More
இந்தியா

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம் என்ன?

ஒரு மாநிலத் தேர்தலின் வெற்றியை ஒரு கட்சி நாடு முழுவதும் கொண்டாடிய காட்சிகளை கடந்த 13-ஆம் தேதி நாம் அனைவரும் பார்த்தோம். கர்நாடகக் காங்கிரஸ் அலுவலகம் விழாக்கோலமாக இருந்தது. கர்நாடக மாநிலத் தேர்தலின் வெற்றி காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்குப் புத்துணர்வளித்திருக்கிறது. அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 47

47. நிதி நெருக்கடி அநியாயத்துக்கு ஜனநாயகவாதியாக இருந்த காந்திஜியின் பலமும், பலவீனமும் அதுவே என்று சொல்லலாம். அதனாலேயே சிலர், காந்திஜியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்படியான கேள்விகளை அவரிடம் தயக்கம் ஏதுமின்றிக் கேட்கத் தலைப்பட்டனர். அதில் ஒன்று காந்திஜி – மோதிலால் நேரு, இடையிலான நெருக்கம் பற்றிய...

Read More
உயிருக்கு நேர் தொடர்கள்

உயிருக்கு நேர் -21

வ. ராமசாமி  (17.09.1889 – 23.08.1951) சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண் விடுதலை பற்றிப் பேசியவர், தமிழ் மொழிக் காதலர், சமூக சிந்தனையாளர் என்ற அடையாளங்களுக்குள் அடங்கியவர் இருவர். ஒருவர் மகாகவி பாரதி. இன்னொருவர் வ.ரா என்ற வ.ராமசாமி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!