8 பேச்சு இவனே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவன் என்றால், கேட்க மட்டுமே செய்பவர்போலத் தோற்றமளிக்கும் ராமசாமி, பேச ஆரம்பித்தால் சரளமாகப் பேசிக்கொண்டே போகிறவர். ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி, அது நடந்ததாகவோ கற்பனையாகவோ கூட இருக்கலாம் – கற்பிதமாகவே இருந்தாலும் நிஜமாக நடந்ததைப்போன்று, காந்தி வந்திருந்தார்...
Tag - இலக்கியம்
7 பிரயாணம் கேட்காமலே ஜன்னலோரம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பச்சை உருளைப் பையை சீட்டுக்கு அடியில் உருட்டிவிட்டான். எதிர் சீட்டுக்காரர் நடுவயது. தேங்காய் பத்தையைக் கவ்விக்கொண்டிருப்பதைப்போல வெளியில் நீட்டிக்கொண்டிருந்த வெளேரென்ற பற்களுடன் இருந்ததால் சிரிக்காத முசுடாக இருந்தாலும்...
6 பகல் போகும்போது இருக்கிற அதே தூரம்தான் போன வழியிலேயே திரும்பிவரும்போதும் இருக்கும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் திரும்புகையில், இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என வாய்விட்டுச் சொல்லும்படி இருப்பதும் சகஜமாக நடப்பதுதான். ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூருக்குப் போனதில் ஆன...
5 இரவு அதுவரை அவன் மெட்ராஸில் போயிருந்த அதிகபட்சத் தூரம், வடக்கே தண்டையார்பேட்டை மணிக்கூண்டு – கல்லூரிக் காலத்தில் த. இராமலிங்கம் வீட்டைத் தேடிக்கொண்டு போனது. தெற்கே கூடுவாஞ்சேரி – பரீக்ஷாவில் இருக்கையில் போலீஸ் உளவாளியாக இருக்கலாம் என்று ஞாநி சந்தேகப்பட்ட சத்யனிடம் அடுத்த நாள்...
4 சஞ்சலம் வசந்தகுமார் சொன்னதிலிருந்தே கனவாக விரிய ஆரம்பித்துவிட்டிருந்தாலும் பாபாவைப் பார்த்ததிலிருந்து சைக்கிள் ரேலி மட்டுமே மனதை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பார்க்கிற எல்லோரிடமும் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தான். டிக்கெட் புக் பண்ணியதற்கு மறுநாள் டக்கர் பாபா வித்யாலயாவுக்குப் போய்...
3 ஆதங்கம் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் போகப்போகிறோம் என்பது ஒருபுறமிருக்க, சுந்தர ராமசாமியைப் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போகிறோம் என்பது உறுதியான உடனே அவருடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்கக்...
2 வேட்கை சைக்கிள் பயணம் பற்றி வசந்தகுமார் சொன்னதும் எதையுமே யோசிக்காமல் போவதென்று முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம், குறைந்தது நான்கு மாதங்களுக்கு ஆபீஸுக்குப் போகவேண்டாம் என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்று இப்போது எண்ணிப் பார்க்கையில் தோன்றிற்று. எட்டு மணிநேரம் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்...
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும் வைத்தபடி, ‘பார்சல் புக்கிங் எங்க’ என்று கேட்டான், முரட்டுக் கதர் குர்த்தாவும் அதற்கு சம்பந்தமேயில்லாத டிராக் ஸூட்டும் அணிந்திருந்த அவன். பெரிய ஆள்...
130 குட்பை இறுதிக்குச் சற்றுமுன் வரவிருக்கிற சம்பவம் நிகழ்ந்து, இருபது வருடங்கள் கழித்து, தி நகர் ஜிஆர்டி ஜிராண்ட் டேய்ஸில் நடந்த சிவரூபன் மச்சினியின் திருமணத்திற்கு இவன் மனைவியோடு போயிருந்தான். தொலைக்காட்சிகளில் மனைவியுடன் (அவர் மாணவியாக இருந்ததிலிருந்தே) அவருடன் முகம் காட்டிப் பிரபல மனநல...
விமலாதித்த மாமல்லன் இப்படியொரு தர்மசங்கடத்தில் போய் தாம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று அவர் என்றுமே நினைத்திருக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்தக் கடன்காரனுக்குத்தான் புத்தி லத்தி தின்னும்படியாகப் போயிற்று என்றால் தமக்கு என்ன ஆயிற்று என்று நொந்துகொண்டார். ஐம்பதைத் தாண்டியவன் செய்கிற காரியமா...












