11 பயிற்சி எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டவன் சுற்றிவர யாரும் இல்லாதது கண்டு ஒன்றுகூட ஒன்றும் சொல்லாமல் போய்விட்டதே எனத் தட்டுடன் எழுந்தவன், எங்குமே ஆட்கள் இல்லாதது கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்தான். குழாயடிக்குப் போய் தட்டைக் கழுவினான். அதை வைக்க இடமின்றிச் சமையற்கட்டிற்குள் எட்டிப்பார்த்தான். ஒரு...
Tag - சக்கரம்
10 ஒருங்கிணைப்பு வடகிழக்கிலிருந்து வந்திருந்தவர்கள் உட்படப் பெண்கள் பத்துப் பதினைந்துபேர் இருப்பார்கள் போலப்பட்டது. நூற்றுக்குப் பத்து பெரிய விஷயம். நடிக்கப் பெண் கிடைக்காமல், பெண்போல இருப்பவர்கள் கிடைப்பதற்கே பரீக்ஷாவில் ஞாநி லோலோவென அலையவேண்டியிருந்ததை நினைத்துக்கொண்டான். பையன்களைப் போலவே...
9 முகாம் ஊரின் தார் ரோட்டுக்குச் சம்பந்தமேயில்லாதபடி திடீரென சாலை மண்ணாக மாறிவிட்டிருந்தது. கடலையொட்டி இருக்கிற விவேகானந்த கேந்திரம் என்பது பெரிய வளாகம் என்று சுந்தரேசன் சொல்லியிருந்தார். தொலைவில் கடலின் இரைச்சல் கேட்பதுபோலக்கூடத் தோன்றிற்று. எனினும் ஓரங்களில் முட்செடிகளும் புதருமாக இருந்த சாலை...
8 பேச்சு இவனே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவன் என்றால், கேட்க மட்டுமே செய்பவர்போலத் தோற்றமளிக்கும் ராமசாமி, பேச ஆரம்பித்தால் சரளமாகப் பேசிக்கொண்டே போகிறவர். ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி, அது நடந்ததாகவோ கற்பனையாகவோ கூட இருக்கலாம் – கற்பிதமாகவே இருந்தாலும் நிஜமாக நடந்ததைப்போன்று, காந்தி வந்திருந்தார்...
7 பிரயாணம் கேட்காமலே ஜன்னலோரம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பச்சை உருளைப் பையை சீட்டுக்கு அடியில் உருட்டிவிட்டான். எதிர் சீட்டுக்காரர் நடுவயது. தேங்காய் பத்தையைக் கவ்விக்கொண்டிருப்பதைப்போல வெளியில் நீட்டிக்கொண்டிருந்த வெளேரென்ற பற்களுடன் இருந்ததால் சிரிக்காத முசுடாக இருந்தாலும்...
6 பகல் போகும்போது இருக்கிற அதே தூரம்தான் போன வழியிலேயே திரும்பிவரும்போதும் இருக்கும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் திரும்புகையில், இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என வாய்விட்டுச் சொல்லும்படி இருப்பதும் சகஜமாக நடப்பதுதான். ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூருக்குப் போனதில் ஆன...
5 இரவு அதுவரை அவன் மெட்ராஸில் போயிருந்த அதிகபட்சத் தூரம், வடக்கே தண்டையார்பேட்டை மணிக்கூண்டு – கல்லூரிக் காலத்தில் த. இராமலிங்கம் வீட்டைத் தேடிக்கொண்டு போனது. தெற்கே கூடுவாஞ்சேரி – பரீக்ஷாவில் இருக்கையில் போலீஸ் உளவாளியாக இருக்கலாம் என்று ஞாநி சந்தேகப்பட்ட சத்யனிடம் அடுத்த நாள்...
4 சஞ்சலம் வசந்தகுமார் சொன்னதிலிருந்தே கனவாக விரிய ஆரம்பித்துவிட்டிருந்தாலும் பாபாவைப் பார்த்ததிலிருந்து சைக்கிள் ரேலி மட்டுமே மனதை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பார்க்கிற எல்லோரிடமும் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தான். டிக்கெட் புக் பண்ணியதற்கு மறுநாள் டக்கர் பாபா வித்யாலயாவுக்குப் போய்...
3 ஆதங்கம் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் போகப்போகிறோம் என்பது ஒருபுறமிருக்க, சுந்தர ராமசாமியைப் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போகிறோம் என்பது உறுதியான உடனே அவருடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்கக்...
2 வேட்கை சைக்கிள் பயணம் பற்றி வசந்தகுமார் சொன்னதும் எதையுமே யோசிக்காமல் போவதென்று முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம், குறைந்தது நான்கு மாதங்களுக்கு ஆபீஸுக்குப் போகவேண்டாம் என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்று இப்போது எண்ணிப் பார்க்கையில் தோன்றிற்று. எட்டு மணிநேரம் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்...