Home » ஒரு நாளில் இரண்டு சாகசங்கள்! – மெரினா அனுபவங்கள்
தமிழ்நாடு

ஒரு நாளில் இரண்டு சாகசங்கள்! – மெரினா அனுபவங்கள்

அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்திய விமானப் படை சாகச நிகழ்வு அதிகம் பேர் கண்டுகளித்த வான் சாகச நிகழ்ச்சி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது.

இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தன. பல இலட்சம் மக்கள் வந்திருந்தார்கள். குறிப்பாகச் சிறுவர், சிறுமியர்கள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தது நம் நாட்டின் வருங்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

இந்திய விமானப் படையின் தினத்தையொட்டி மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சிகள் 2021ஆம் ஆண்டு வரை தலைநகர் டெல்லியில் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து மற்ற மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டு பஞ்சாப்பின் சண்டிகர், அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (அலகாபாத்) நடந்தது. தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடந்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

நான்காம் தேதி அன்று ஒத்திகைகள் நடந்தன. என் வீட்டிலிருந்து மெரினா கடற்கரை சுமார் ஒரு கிலோ மீட்டர் என்பதால், என் வீட்டு மொட்டை மாடியில் இருந்தே தெரியும் என்று எண்ணி அன்றைக்குக் கொளுத்தும் வெயிலில் நின்று தலைவலி வந்தது தான் மிச்சம். எல்லாச் சாகசங்களும் கடலின் மேல் செய்யப்பட்டதால் எங்கள் வீட்டிலிருந்து விமானங்கள் போவதும் வருவதும் மட்டுமே தெரிந்தது. அப்பொழுதே முடிவு செய்தேன், இவ்வளவு அருகிலிருந்து இந்த நிகழ்ச்சியைத் தவற விடக் கூடாதென்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!