பால்கனியில் நின்று அம்மாவிடம் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா அதைக் கவனித்தாள். லேசாய் திடுக்கிட்டாள். கிரில்லுக்கு வெளியே கம்பியில் காயப்போட்டிருந்த பச்சைப் புடைவையைக் காணோம். ‘ஒரு நிமிஷம்மா’ என்று சொல்லிவிட்டு அவசரமாக மொபைலை வாஷிங் மெஷினின் மேல் வைத்துவிட்டு பால்கனியின் சிறிய கிரில் கதவைத் திறந்தாள். வெளியே எட்டிப்பார்த்தாள். புடைவை இரண்டாவது ஃப்ளோரின் துணிக்கொடியில் அபத்திரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. காற்றடித்தால் கீழே விழுந்துவிடும் அபாயத்தில் இருந்தது.
இதைப் படித்தீர்களா?
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.















கடைசி வரி – நினைவு! சுஜாதா!