சரியான குளிர். இந்த வருடத்துக்கான பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின் பிடியில் ஆழ்ந்திருந்தது. மலைவாசஸ்தலம் என்றாலே என்னவோ சுற்றுலா வந்து திரும்பினால் போதும் என்பதான மனோநிலைதான் பலருக்குமுள்ளது. நுழைந்து கிறங்குவதெல்லாம் முதல் இரண்டு தினங்களுக்குத் தான். நாலே நாட்களில் அலுத்துக் கொட்டும். ‘எப்படா கீழே இறங்குவோம்?’ என்று தலைதெறிக்க வளைவுகளில் நீந்துவார்கள். பலரும் இப்படியான இரட்டை மனோபாவத்தை நிரந்தரம் செய்து கொண்டவர்கள் தான். எருமை மாடு சகதியுட் புகுகிறாற் போல் ஓரிடத்தை ஆக்கிரமித்து விட்டு அதே இடத்தைக் காலடிகளால் கந்தலாக்கிய பிற்பாடு ஒன்றுமே நடவாத பாவனையில் திரும்பிச் செல்பவர்கள். மனோகருக்கு இப்படியான மனிதர்களைப் பார்க்கும் போது வினோதமாய்க் கோபம் உருக்கொள்ளும். bull-shit! சற்றே உரக்கத் தான் சொல்வான்.
இதைப் படித்தீர்களா?
நான் சார்வாகனின் சிந்தைக்குள்தான் இருந்தேன். அங்கேயேதான் கருவூர்ச் சித்தரும் இருந்தார். எனக்குப் புலப்படாத அந்த இன்னொரு சிந்தை அவருக்கு மட்டும்...
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய அமெரிக்கா-இரான் யுத்தத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான...















Add Comment