கால் நூற்றாண்டுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்றிருக்கிறது. இனி இரட்டை இஞ்ஜின் ஆட்சி மூலமாக டெல்லி சொர்க்கபுரியாகும் என அந்தக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறை மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது. அதேபோன்று டெல்லியிலும் மூன்றாவது முறை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கொண்டிருந்தது. ஆனால் மக்களின் எண்ணம் முற்றிலும் வேறாக மாறிவிட்டிருந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று பெரும் கட்சிகள் தனித்தனியாகக் களம் கண்டன.
Add Comment