23. பொருள் அல்ல, கதை வேண்டும்!
ஒரு குறும்படம்
‘இன்னும் டீ போடலையா?’ வரவேற்பறையிலிருந்து மாமியார் கத்துவார். உள்ளிருந்து கடமுடவெனப் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கும். மகன் கண்டுகொள்ளாமல் ஸோஃபாவில் அமர்ந்து ரிமோட்டை அமுக்க, அது வேலை செய்யாது. பின்பக்கத்தைத் திறந்து பார்த்தால் பேட்டரி இருக்குமிடம் காலியாக இருக்கும்.
‘பேட்டரி எங்க போச்சுமா?’
‘எல்லாம் இன்னிக்கு காலையிலேர்ந்துதான் ஆரம்பிச்சிருக்கு. உடனே ஃபோன் பண்ணு.’ சமையலறையைப் பார்த்துக் கொண்டே சொல்வார் அம்மா.
மகன் சங்கடமாகத் திரும்பிப் பார்ப்பான். மனைவி அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொள்வாள்.
‘நீ ஃபோன் பண்றியா, நான் பண்ணட்டுமா?’
அறைக்குள் இளம் மனைவி டிரெஸ்ஸிங் டேபிளில் அமர்ந்து நிதானமாகத் தலையை வாரிக் கொண்டிருப்பாள்.















Add Comment